பக்கம்:பாவியக் கொத்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணல்லள்

ஆப்பஞ்சுட் டுண்ண அடுக்குவதும், நீங்களதை ஏப்பம்விட் டுண்ண முடியாமல் உண்ணுவதும், எஞ்சியதை நானுண் டிருப்பதுவும், நண்பகலில் பஞ்சாய்ப் பறந்து பலவகையிற் காய்கறிகள், செய்வதவு மாகிப்பின் சின்னக் குழந்தைக்கு வெய்யிலே காயவைத்த இளஞ்சூட்டு வெந்நீரை, 40 ஊற்றித் தலையுணர்த்தி உண்ணப்பா லூட்டிப்பின் ஆட்டி புறங்கவைத்தே அப்பாடா, வென்றே உடல்சாய்த்தால், உண்ணுவதற் கோடோடி வந்து கடல்மேலே விட்டுவைத்த கப்பலுக்குப் போவதுபோல் ஆட்டிப் படைக்கின்றீர்! ஆாாலே ஆகுமிது? நீட்டிப் படுக்கவொரு நேரமில்லை! ஆமாமாம்! காலைக்குள் வீட்டுக் கதையை நடத்திவைக்க வேலைக்கா ரப்பெண் ஒருத்தி வேண்டும்"என்ருள்.

வாழை யிலையில் விரல்உகிரால் ஒவியத்தை ஆழ வரைந்தபடி அன்னத்தாள் சொன்னவற்றைக் 50 கேட்டுத் தலைநிமிர்ந்த காதற் கணவனவன் ஏற்று வெளிநடந்தான்! எங்கிருந்தோ தேடியன்று, பின் மாலைப் போதிலொரு பெண்ணை

அழைத்துவந்தான்! இன்மாலை யாகிற் றது!