பக்கம்:பாவியக் கொத்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணல்லள்

78

உண்பதுவும் உண்டே உறங்குவதும் பிள்ளைக்குப் பண்ணுத ஒப்பனைகள் பண்ணி மகிழுவதும், அன்னத்தாள் ஏற்றிருக்கும் அன்ருட வேலைகளாம்! அன்னத்தின் மாமிக் கதில் மகிழ்ச்சி என்ருலும். 80 இல்லப் பொறுப்பின்றி, இல்வேலைத் தூய்மையின்றிக் கொல்லப் படுகின்ற பெண்மைக்குக் காப்பின்றிப் போனதை எண்ணிப் பொருமியவா றேயிருந்தாள்: தானவற்றை எண்ணுமல் அன்னம் தனித்திருந்தாள்:

அன்றைக் கொருநாளில் அன்னம் கணவனுடன் என்றைக்கு மில்லாத இன்பமிகும் பேச்சிலுயிர் துவி மகிழ்ந்திருக்குந் தோதினிலே 'அத்தான்.நம் ஆவல் கணிக்கோர் அழகான மோதிரமும், முன்வீட்டுக் காரிசெய்த முத்துப் பதக்கம்போல்,

என்கழுத்திற் கொன்றுமா பித்திங்கள் ஊதியத்தில்

செய்யுங்கள்” என்ருள்; செவியில் இடியேற 9t) "மெய்யாகச் செய்கின்றேன் முப்பதுக்குப் போகுமா?" என்ருன் அவளத்தான் "என்னத்தான் பேசுகின்றீர்; முந்நூறு போட்டால்தான் முத்தால் பதக்கமாம்; பின்னூறு போட்டால்தான் பிள்ளைக்கு மோதிரமும்! இன்ன படியிருக்க எப்படியாய்ப் பேசுகின்றீர்?", என்று சினந்தாள்: 'இருக்கட்டும் என்றனுக்கே என்ன வருமானம் என்றே உணர்ந்தாயா?" என்ருன்; அதற்கவளோ "எவ்வளவென் ருலென்ன? அன்றுபோ னேமே அரைஞாண் கொடிவாங்க! 100 காசுக் கடைத்தெருவின் கோடியிலே வந்திருக்கும் மூசைப்பொன் விற்கின்ற மோகனராம் சேட்டிடத்தில் நூற்றுக்குப் பத்தென்று நூறுபொன்னும்

வாங்கிடலாம்