பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 s பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அதுபற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னா ரால் எழுதியவை என்பதைக் குறிக்க வேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப்பக்கமாக * இக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப்புத்தகத்தில் அச்சுப்பிழையில்லாத இடம் அருமையாகி விட்டது. முதலாளிகட்கு இதில் கவலையிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந்தாலும் அவர் களின் இச்சட்டம் அக்கரமமானதும் நாணயமற்றது மாகும். நான் விழுப்புரத்தில் பாலாமணி” பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக் சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை. பாலாமணிக்குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸ்மாக எழுதிய பாடல் இது : யூரீ பாரத தேவி புராதனியே! எழில் அன்னைநல் வீராவேசம் தீராக் காதல் மேவச் செய்தாய் என்னை உதாரி ஜெயசீலி! காவேரி கங்கா தீர நாரீப்ரபல ஹிமய கிரி தேஹி கோடானு கோடிப் போர்வீரர் தங்கள் புனித வளமுடைய நிலத்தலைவி முதல்வியே! அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சந்தமுகி வாழி! இதை நீக்கி- கோர்குகா ஷண்முகா' என்று