பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் ரீ இராமாநுஜர் விருதையும் (1996 - 25,000 வெண் பொற்காசுகளையும்) வழங்கிச் சிறப்பித்துள்ளன.

அண்மையில் இவர்தம் இயற்றமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்இயல் இசை நாடக மன்றம் (அரசு கலைமாமணி’ என்ற விருதினையும் (19993 சவரன் தங்கப் பதக்கம், இவர்தம் தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சென்னை கோயம்பேடு மனிதநேய வைணவ இயக்கம் வைணவ இலக்கிய மாமணி என்ற விருதினையும், (2001), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் டி.லிட் (கண்ணியம்) என்ற பட்டத்தையும் (1999), காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை சேவாரத்னா விருதினையும், (1000 வெண்பொற்காசுகள்1999) இவர்தம் வைணவப்பணியைப் பாராட்டி வழங்கிச் சிறப்பித்துள்ளன. இவர்தம் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் பாராட்டி தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் விருது’(2001-ஒர் இலட்சம் வெண் பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தது.

இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.

- xiii