பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 x பாவேந்தரின் பாட்டுத்திறன்

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!


ஆடுகின்றாய்; அலகின் துனியில் வைத்தகூன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்! சாயல்உன் தனிச்சொத்து சபாஷ்! கரகோஷம்!


ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனவுன் மெல்லுடல், ஆடல் உள்உயிர், இவைகள் என்னை எடுத்துப் போயின. இப்போது"என் நினைவு” என்னும் உலகில் மீண்டேன்; உனக்கோர் விஷயம் சொல்வேன்; தீயும் பெண்களும்“நிகர்” என்கின்றார்: திசம்.அது: திசம்: திசம்!- நிசமே யாயினும் பிறர்பழி துற்றும் பெண்கள்.இப் பெண்கள்! அவர்கழுத் துன்கழுத் தாகுமோ சொல்வாய்! அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்பதற்கே! இயற்கை அன்னை அப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ, கறையொன் றில்லாக் கலாப மயிலே, திமிர்த்து நிற்க நீள்கழுத்தளித்தாள்! இங்குவா உன்னிடம் இன்னதைச் சொன்னேன்; மனத்திற் போட்டுவை; மகளிர் கூட்டம், என்னை ஏகம் என்பதற்காக!

  புவிக்கொன்றுரைப்பேன்; புருஷர் கூட்டம் பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள் சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!”

17. பா.தா.க. முதல் தொகுதி- பக்கம் 53.54