254 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்
என்று விடுதலை பெற்ற ஒராண்டுக்குள் (குயில் - 15-7-48) இந்த எதிர்ப்புக் குரலை எழுப்ப வேண்டியதாயிற்று மைய அரசின் தறுதலைச் செயலால்:
வருமொழியாம் இந்தியையும் வடநாட்டார் ஆட்சியையும் ஒருநாளும் ஒப்போமென் றதிராயோ முரசே!” என்று இந்தி எதிர்ப்பு முரக கொட்டுகின்றார்.
குமுறும் தமிழ்க் கடலே - இந்தி கொணரும் பகைமேல் எழுவாய்’ என்று கடலாகத்திரண்டிருக்கும் தமிழர்கட்கு எழுச்சியூட்டி எழுப்புகின்றார். இன்னும் இந்தி வந்தால் செந்தமிழின் உயிர் நின்று விடும் என்று உணர்த்துகின்றார்.
தாய்க்குச் சலுகையின்றித்
தாழ்கின்றாள்! இந்தினனும் பேய்க்கு நறுநெய்பால்
பெய்க என்கின்றார் என்தமிழா!
“தமிழழியுமானால்
தமிழர் அழிவர்"- இதை தமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா!
தென்றற் பொதியமலை
செந்தமிழ்க்கு மீதியாய் தின்றஉயிர் இந்திவந்தால்
நீங்கிவிடும் என்தமிழா!
தேளுக்கதிகாரம்
சேர்ந்துவிட்டால் தன்கொடுக்கால் வேளைக்கு வேளை
விளையாடும் என்தமிழா!
44. வேங்கையே எழுக! - பக்கம் 78 45. வேங்கையே எழுக! - பக்கம் 79