24 பாவேந்தரின்பாட்டுத்திறன்
(2) “அவளை மறந்துவிடு"- என்ற தலைப்பில் ஒரு கவிதை
மறந்துபோ நெஞ்சே அந்த
வஞ்சியை நினைக்க வேண்டா இறந்துபோ என்றே என்னை
இவ்விடம் தனியே விட்டாள்! பறந்துபோ இரவே என்றேன்
எருமையா பறந்து போகும்? உறங்கவே இல்லை கண்கள்
ஒட்டாரம் என்ன சொல்வேன்? இஃது ஐந்தில் ஒன்று.
இவை இரண்டும் “காதல் நினைவுகள்” என்ற தொகுப்பில் கண்டவை.
“காதல் நினைவுகளில் மேலும் சில:
(1) விழலாக வில்லை என்
காதல் விண்ணப்பம்! அழகிய மாமிக்கென் நன்றி!
விழியினால் எழுதினாள் ஒப்பந்தம் வெண்நகையால் இட்டாள் கையெழுத்தும்
பிழைசெய்த தச்சுக்கு வழிகாட்டும் வடிவு பெண்சுமைக்கு முடிந்தஒர் முடிவு வழியிலோர் ஏழைக்கு வாய்த்தபொற் குவியல் வளவயல்தான்; அவள்சம்பா நடவு! இது “காதலை மறந்து விடு’ என்ற தலைப்பில் உள்ள கவிதை:
(2) அன்னநடை நடப்பாளா? - என்
முன்னே முன்னே வருவாளா? தன்னுடை திருத்து வாளா? - தன் மின்னிடை குலுக்கு வாளா? - அவளுக் கென்மேல் ஆசை இல்லாவிட்டால் எனைக் கண்டு சிரிப்பாளா?
காலங் கடத்தக்கூடா-தென்று கையோடு பிடிப்பாளா? - அவள்