பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நினைவில் நின்றவை தொடர்ந்து குயிலில் வெளியிட்டதோடு என் மொழிபெயர்ப்பைப் பாராட்டிக் கீழ்கண்ட சிறப்புக்கவி ஒன்றையும் எழுதி வெளி யிட்டிருந்தார். நான்செய் தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான்செய் தளிக்கும் தகுதியிலே-வான்போன்றான் வாழ்கவே நன்முருகு சுந்தரந்தான் வண்மையைல்லாம் சூழ்கவே சீர்த்தி தொடர்ந்து. எந்தவித அறிவிப்புமின்றி 1.8.65 இதழோடு குயில் திடீரென்று நின்றுவிட்டது. பாவேந்தரின் பொருளாதார நெருக்கடிதான் காரணமென்று எண்ணுகிறேன். குயில் நின்றதும் பாவேந்தர் பாடலை மொழிபெயர்க்கும் வேலையை நானும் நிறுத்திக் கொண்டேன். இம்மொழி பெயர்ப்புப் பணியைக் குறிப்பிடும்போது, இது பற்றிய வேறுசில செய்திகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பாவேந்தர் பாடலை மொழிபெயர்க்கும் பணியில் பலர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருவாளர் பாலகிருஷ்ணன் அவர்கள். இவரைப் பற்றி நான் முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கன்றே பிறந்தவர். ஆங்கிலம் இவரிடத்தில் தாய்மொழி போல ஏவல் செய்யும். சுயமரியாதை இயக்கப்பற்றும் பாவேந்தர் பாடலில் அளவு கடந்த ஈடுபாடும் கொண்டிருந்த காரணத்தால் உயிரும் உணர்வும் கெடாமல் கவிதை அழகோடு இவரால் மொழிபெயர்க்க முடிந்தது. பாவேந்தரின் தனிப்பாடல்கள் சிலவற்றையும், எதிர்பாராத முத்தம் காப்பியத்தையும் இவர் மொழிபெயர்த்து முடித்திருந்தார். ஆனால் அம்மொழி பெயர்ப்புகள் இன்னும் அச்சேறாமல் இருப்பது வருந்தத்தக்கது. பாவேந்தரின் பாடல்கள் சிலவற்றைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரும் மொழிபெயர்க்க முயற்சி எடுத்துக் கொண்டார் என்று தெரிகிறது. குடும்பவிளக்கின் முதற்பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்தபோது கட்டில் அழகு ஏன்று ஒரு தலைப்பிட்ட ஒரு பாடலை மொழிபெயர்க்க வேண்டி வந்தது. "சரக்கொன்றை தொங்கலிட்ட பந்தலின் கீழ் தனிச் சிங்கக் கால்நான்கு தாங்கும் கட்டில் என்ற வரிகள் வந்ததும் பன்மொழிப் புலவருக்கு மலைப்பு வந்துவிட்டது. இதை எப்படி மொழிபெயர்ப்பது? என்று தெரியாமல் தடுமாறுகிறேன் என்று பாவேந்தரிடம் குறிப் பிட்டாராம். 'கொன்றை என்பது தமிழ் நிலத்தில் முல்லையில்