பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 107 பூக்கும் பூ. அந்தச் சொல்லை அதனுள் அடங்கியிருக்கும் கருத்துச் செறிவும் திணைப்பண்பும் புலப்படும்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது முடியாது என்று கருதியிருக்கலாம். மேலும் இவ்வரிகளை மொழிபெயர்ப்பவர்கள் பல செய்திகளை உணர்த்தியாக வேண்டும். கொன்றை சரஞ்சாரமாக பூக்கும் தன்மையுடையது என்பதையும், படுக்கையறைக் கட்டில், மீது மலர்ப்பந்தல் போடுவது தமிழ்நாட்டு வழக்கம் என்பதையும், கட்டில் கால்களை அரியணை போல் நான்கு பக்கமும் சிங்கந்தாங்கும்படி கலையழகோடு அமைத்தல் தமிழர் இயல்பு என்பதையும் மொழி பெயர்ப்பில் உணர்த்தியாக வேண்டும். சிரமந்தானே? தமிழ் இலக்கியங்களைப் பிற மொழியில் பெயர்ப்பது என்னும் பணி தனிப்பட்ட ஒருவரின் ஆர்வத்தாலும் ஊக்கத்தாலும் நிறைவேறக் கூடியதா? இஃது ஒரு நாட்டின் அரசாங்கம் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய வேலை. பாவேந்தர் நிலை இரண்டுங்கெட்டான் நிலை. பாவேந்தர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே, தமிழக அரசு புதுவை அரசாங்கம் இப்பணியை மெற்கொண்டு செய்யட்டுமே எனக் காத்திருக்கிறது. புதுவை அரசோ, தமிழக அரசு எப்படியும் செய்துவிடும்; நாம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்று நினைக்கிறதுபோல் இருக்கிறது. பாவேந்தர் ஒரு தமிழர்; அவர் படைப்புக்களை மொழிபெயர்ப்பது தமிழர் கடமை என்று யாரும் நினைக்கக் காணோம். நான் சேலம் திரும்பிய பிறகு எப்போது சென்னை சென்றாலும் பாவேந்தரைச் சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவது என்பது என் வழக்கமாகிவிட்டது. தமது பொருளாதாரத் தட்டுப்பாட்டின் காரணமாகப் பாவேந்தர் தாம் குடியிருந்த இராமன் தெரு பங்களாவின் முன்பகுதியைக் காலி செய்துவிட்டு ரூ. 70 வாடகையில் பின்கட்டு(Out House)க்குக் குடிபெயர்ந்து போய்விட்டார். நான் ஒருமுறை சென்னை சென்றிருந்தபோது பாவேந்தரும் நானும் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். அப்போது என் தம்பி முருகுரத்தனம் மாநிலக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் அப்போது கடற்கரையைப் பார்த்தபடி அமைந்திருந்த பல்கலைக்கழக நிறைகலை மாணவர் விடுதியில் (University PG Students, Hostel) தங்கியிருந்தான். அவனைப் பார்க்கலாம் என்று நானும் பாவேந்தரும் கிளம்பினோம். நாங்கள் கிளம்பும்போது பாவேந்தருக்கு அறிமுகமான ஒரு பார்ப்பன நண்பரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார். அன்று விடுதியில் ஏதோ விருந்து. பாவேந்தர் புலால் உணவை விரும்பிச் சாப்பிடுபவர் என்பதை அறிந்து