பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi2 நினைவில் நின்றவை அவ்வசைக் கவிதைக்குரியாரின் முகவரி எழுதப்பட்டிருந்தது. அவர் யாரையும் பெயர் சுட்டாமல் பொதுவாக மாநாடடையும், மாநாட்டில் கலந்து கொண்ட எல்லாக் கவிஞரையுைம் தமிழுணர்வு அற்றவர்களென்று திட்டித் தீர்த்திருந்தார். பாவலர் மாநாடு' என்று போடாமல் கவிஞர் மாநாடு என்று போட்டிருந்ததே அவ்வசைப் பாடலுக்குரிய அடிப்படைக் காரணம். அப்பாடலைப் பாவேந்தரிடம் காட்டினேன். இது அந்தத் துரை மாணிக்கம் வேலை என்று மட்டும் சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். 10.11.63 பிற்பகல் கவிஞர் தமிழன்பனோடு பாவேந்தர் ஈரோடு புறப்பட்டுச் சென்றுவிட்டார். 11.11.63 திங்கட்கிழமை பிற்பகல் ஈரோடு மதரசா உயர்நிலைப் பள்ளியில் பாவேந்தரின் சொற்பொழிவு நடைபெற்றது. அடுத்த நாள் பாவேந்தர் சேலம் வந்துவிட்டு அன்று இரவே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டார். இரண்டாம் முறை அவர் சேலம் வந்தபோது நான் ஊரில் இல்லை. தவிர்க்க முடியாத ஒரு வேலையின் காரணமாக நான் திருச்செங்கோடு சென்றுவிட்டேன். அன்று பாவேந்தரை விடுதியில் சென்று சந்திக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என் வருத்தத்தைத் தெரியப்படுத்தி அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடனே பாவேந்தர் அதற்குக் கீழ்க்கண்ட மறுமடல் விடுத்தார். 16. 1 1.63 திரு முருகு வாழ்க நாங்கள் அங்கு வந்தபோது எமக்குப் பேருதவி புரிந்தீர்கள். நன்றி. 13.11.63ல் நீங்கள் எழுதிய அஞ்சல் கண்டேன் சேலம் ஒட்டலில் நீங்கள் சந்திக்க இயலாமை இயல்பு. யாம் அதுபற்றி வருந்தவில்லை. நன்றி மறவாத பாரதிதாசன் இராசிபுரத்தில் கவிஞர் மாநில மாநாடு நடைபெற்ற அதே ஆண்டு பாவேந்தர் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஓரிரண்டு நிகழ்ச்சிகள் சென்னையிலும் நடைபெற்றன. 29.4.63இல் சென்னை அண்ணாமலை மன்றத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் 74ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதன் அழைப்பிதழ் ஒன்று எனது சேலம் முகவரிக்கு வந்தது. இந்த 74ஆவது பிறந்தநாளை நடத்த ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டிருந்தது. விழாக்குழுவின் தலைவராகத் திருவாளர் N. பாபு ஜனார்த்தனம், B.A., B.com (கோல்டன் ஸ்டுடியோ உடையவர்) அவர்களது பெயர் போடப்பட்டிருந்தது. திருவாளர்