பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மார்கழியின் உச்சியில்...! குழந்தைக்குப் பலூன் பிடிக்கும். காரணம் அது எல்லாக் கடையின் முன்னாலும் தொங்கவிடப்பட்டிருக்கும். எனது காய்ப் பருவததில் சுத்தானந்த பாரதி பாட்டுத்தான் எனக்குப் பிடிக்கும். காரணம் பிரித்த பத்திரிகையில் எல்லாம் அவர் பாட்டுத்தான் வெளியாகியிருக்கும். எனது சொந்த ஊர் சிக்கலுக்குப் பக்கத்தில் உள்ள பழையனூர். பழையனுரரில் நான் வழக்கமாகத் தேநீர் அருந்தும் கடையின் சொந்தக்காரன் அழகப்பன். அவன் தாடிச்சிங்கம் தந்தை பெரியாரின் தலைமையில் திருமணம் செய்து கொண்டவன். துங்கும்போது கூடக் கருப்புச் சட்டையைக் கழற்ற மறுக்கும் திராவிடர் கழகத் தீவிர உறுப்பினன். ஒரு நாள் தேநீரை ஆற்றிக்கொண்டே ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால்...... என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை டைம் கொடுத்து வெட்டி வெட்டிப் பாடினான். அப்பாடலைக் கேட்டு அப்படியே மெய்மறந்து நின்றேன். அந்தக் கணமே சுத்தானந்த பாரதியின் பலூன் பாட்டைப் பறக்க விட்டுவிட்டுப் பாவேந்தர் வரிகளைப் பற்றிக்கொண்டேன். அன்றிலிருந்து நந்தனுக்குப் பிடித்த சிதம்பரப் பயித்தியம் போல், எனக்குப் புதுவைப் பயித்தியம் பிடித்துக் கொண்டது. 1941-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று பொங்கல் நாள். நான் காதலித்துக் கூட்டி வந்த பெண்ணோடு பாவேந்தர் வீட்டுக்கு வந்து அவர்முன்னால் நின்றேன். பாட்டு வரிகளில் பதித்திருந்த விழிகளை உயர்த்தி எங்களைக் கொஞ்ச நேரம் பார்வையால் எடைபோட்டார். ஒளிமிகுந்த கண்கள் உள்ளத்தை ஊடுருவும் தீட்சண்யமான பார்வை! பிறகு சாட்டையைச் சொடுக்குவது போலச் சில வார்த்தைக்கேள்விகள்: யார் நீ? ராஜகோபால். gosario? சிக்கல். இது? என் காதலி. எங்க? கலப்பு திருமணம் செய்துக்கலாமுன்னு.