பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் варыі 143 மாநாடு காலையில் சிறப்புடன் நடைபெறாமல் தடைப்பட்டது. தலைவர்கள் கலைந்து பெருமாள் அவோக்கா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அதுபோது பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சிலரும், அவர்களின் கையாட்களிற் பலரும் கவிஞரை வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசினர். பாவேந்தரால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. அக்கொடுங் காலிகளிடையே இருக்கிறோமே என்பதையும் கருதவில்லை. சினங் கொண்ட சிறுத்தையைப்போல் சீறியெழுந்தார்; அவர்களை முறைத்துப் பார்த்தார். அந்த அறிவிலிகளில் ஒருவன் கவிஞரின் கன்னத்தில் அறைந்து விட்டான். அவன் தனியிருந்து தாக்கியிருந்தால், கவிஞரின் ஒரே ஒர் அறையில் அவன் உயிர் போயிருக்கும். காலஞ்சென்ற நெல்விக்கிருஷ்ணன் இடையே புகுந்து கவிஞரைப் பாதுகாப்போடு வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்தார். இதைக் கேட்டறிந்ததும் சிறையிலிருந்த பொதுவுடைமை கட்சித் தலைவர் திரு.வ.சுப்பையாவே மிகுந்த கவலைப் பட்டாராம். தலைவர் சுப்பையா சிறையில் இல்லாதிருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்தேறியிருக்காது. அறிஞர் அண்ணா, பெரியார் இராமசாமியின் பேச்சைக் கூடக் கேட்காமல் கவியரசருக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும் என்று ஏற்பாடு செய்தார்கள். 28.7.1946இல் நாவலர் ச.சோ. பாரதியார் தலைமை தாங்கினார்; இசையரசு தண்டபாணி தேசிகர் இன்னிசை வழங்கினார்; இரா.பி.சேதுப்பிள்ளை முதலிய மாற்றுக் கருத்துடைய பெரியார்கள் பலர் பாராட்டுரை வழங்கினர். "பெரியார் இராமசாமி இவ்விழாவில் இல்லாத ஒரே குறைதான் என் மனக்குறை” என்று இறுதியில் நன்றி கூறிய அறிஞர் அண்ணாவின் பேருரையோடு விழா சிறப்புடன் முடிவுற்றது. கவிஞருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு 25,000 ரூபா கொண்ட பொற்கிழி ஒன்று வழங்கப்பட்டது. இவ்விழாவிற்குத் துணைநின்ற பொதுமக்கள், செயல்புரிந்த அறிஞர் அண்ணா, பாரதிதாசன் நூல்களையெல்லாம் நல்ல முறையில் கவினோடு வெளிக்கொணர்ந்த முல்லை. பழ. முத்தையா, மறைந்த டி.என். இராமன், சலகண்டபுரம் ப. கண்ணன் முதலியவர்களின் ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டத் தக்கது. 1950ஆம் ஆண்டு கோவையில் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி முதலியவர்களின் முயற்சியால், கோவை முத்தமிழ் மாநாடு ஒன்று நடந்தது. அதில் கவியரசர், நாவலர் ச.சோ. பாரதியார், கலைவாணர் என்.எஸ்.கே., கா.அப்பாத்துரை, அறிஞர் அண்ணா, இரா.