பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 21] சொன்னேன். அன்று மாலை நாங்கள் எல்லாரும் மாப்பிள்ளை ஊரான கட்டிப்பாளையத்திற்குச் செனறோம். அன்றிரவே என்னைத் தவிர மாப்பிள்ளை உட்பட அவர்கள் நால்வரும் பாவேந்தர் அவர்களைக் காணச் சென்னை முத்தமிழ் நிலையத்துக்குச் சென்றார்கள். நான் நேராகப் போடிநாய்க்கன்பட்டி வந்து, மாப்பிள்ளை எனக்குப் பிடித்திருப்பதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த திட்டங்களுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டதாகவும் பாவேந்தருக்கு எழுதினேன். பாவேந்தரிடமிருந்து உடனே எனக்குக் கீழ்க்கண்ட கடிதம் வந்தது. புதுச்சேரி 19, 1.44 தோழர்கள் செல்லப்ப ரெட்டியார், கருப்பண்ணன் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு, தங்களுக்கு நான் எழுதினேன் என்று முருகு இருந்துவிட்ட விஷயமும், முருகு எழுதினாரென்று நான் இருந்துவிட்ட விஷயமும் இன்று விளங்கிற்று! திருமணத்தில் தாலிகட்ட மறந்தது போல் இருக்கிறது இந்த விஷயம். தோழர் கா. பெருமாளுக்கும் தெரிவிக்க, பிறருக்கும் தெரிவிக்க 75 அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். பெண்ணுடன் 20.1.44ஆம் தேதி இரவு புதுவையில் இரயிலேறி, 21.1.44ல் திருச்சி ஜங்சனில் இறங்கி நேரே (காலை) வேதாசலம் வக்கீல் வீட்டில் இறங்கி-அங்கு-ரிஜிஸ்டர் முடித்து, உடனே மத்தியான சாப்பாடு கே.ஏ.பி. வீட்டில் முடித்துக்கொண்டு-மாலை கருணாநிதி பார்க்கில் காபி சாப்பிட்டு-இரவு சாப்பாட்டிற்கு உட்னே அதாவது 21.1.44 ஆம் தேதி இரவு கட்டிப்பாளையம் நோக்கிப் புகழுர் போக வேண்டியது. இந்தத்திட்டம் திருச்சியில் அனைவர்க்கும் தெரிவித்தாய் விட்டது. நாமக்கல் நம் தோழர்கள் இவைகளை அறியும்படி செய்க. தாங்கள் மூவரும் திருச்சிக்கு வந்து அங்கிருந்து கட்டிப் பாளையத்திற்கு வந்து திருமணத்தைச் சிறப்பிக்க வேண்டுகிறேன். தங்களன்புள்ள பாரதிதாசன் கடிதம் 21.1.44ஆம் தேதிதான் கிடைத்தது. ஆதலால் உடனே நானும், t) இது திருச்சிராப்பள்ளிக் கழகத் தோழர் சங்கரன் வீடு