பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 219 பாரதிக்குப் பின்னர் பாரதிதாசன் மரபு ஒன்று தமிழ் நாட்டில் உருவாகி, அவர் வழியில் இளங்கவிஞர் தலைமுறையொன்று வளர்ந்தும் வருகிறது. பாரதிக்குத் தாசன் என்று அவர் தம்மை அழைத்துக் கொண்ட போதிலும், பாரதியைச் சந்திப்பதற்கு முன்னமே புதுவை கனகசுப்புரத்தினம் பெரும் புலவராகவும் கவிஞராகவும் விளங்கியவர்தாம். பாரதியின் தொடர்பாலும், அவரிடம் சுப்புரத்தினம் கொண்டிருந்த பக்தியினாலும் பாரதிதாசன் எளிய இனிய தமிழ்க் கவிதைகள் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டார். அதில் வெற்றியும், பாரதியின் நேரிடையான பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றவரானார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் பாரதியும் பாரதிதாசனும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தது அவர்களுடைய நட்பின் அடிப்படையாகும். புதுவையில் பாரதியாரின் மெய்க்காவல் பொறுப்பையும் மேற்கொண்ட வீரர்களின் தலைவராக விளங்கிய கனகசுப்புரத்தினம் பாரதிதாசனாக மலர்ச்சியடைந்தது இயல்பு. சுத்தச் சுயமரியாதை இயக்கக் கவிஞராக பாரதிதாசன் பிரசித்தமடைந்தபோது ஒரு பார்ப்பனருக்குத் தாசன் என்று தம்மை அவர் அழைத்துக் கொள்வதை இயக்கப் பிரமுகர்கள் சிலர் ஆட்சேபித்த போதும் கூட, பாரதிதாசன் தம் பெயரை மாற்றிக் கொள்ள ஒப்பவில்லை. பாரதியை இனத்தின் பெயரால் யார் இழிவு கூறுவதையும் பொறுக்காத உணர்ச்சி வேகத்துடன் அவர்களின் மடமையைச் சாடும் நேர்மை அவரிடமிருந்தது. பாரதிதாசன் பார்ப்பனிய எதிர்ப்பாளர் என்பது நாடறிந்த உண்மை. ஆயினும் அவருடைய அந்தரங்க நட்பிற்கும் மதிப்புக்கும் உரிய பார்ப்பனர் பலர் உளர். அவர்களிடையில் இந்தக் கட்டுரை யாளருக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்து வந்தது. புரட்சிக்கவி என்ற மகுடமிட்டு பில்ஹண காவியத்தைப் புரட்சித் திருப்பத்துடன் அருமையான தமிழில் அவர் இயற்றியிருக்கிறார். இப்படைப்பால் பாரதிதாசனுக்கே புரட்சிக்கவி என்ற கீர்த்தி நிலைத்துவிட்டது. கவியரசர் பாரதிதாசனை முதன்முதலில் நான் சந்தித்தது விழுப்புரத்தில். 1938-ல் பாலபாரதம் என்ற மாதப் பத்திரிகையை அங்கிருந்து நடத்திக் கொண்டிருந்தேன். பாரதிதாசனுடைய கவிதைகள் முதல் தொகுதி சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்திருந்தது. பேராசிரியர் கே. ஸ்வாமிநாதன் தினமணி ஆண்டு மலரில் பாரதிதாசன் ஒரு சிறந்த கவிஞர் என்ற சிறிய அறிமுகக்