பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 - என் ஆசான் பாரதிதாசன் முற்றலானவை. நீ அனுப்பிய புறாக்களைப் பெற்றேன்; அத்துணையும் கிழங்கள் என்று அடுத்தநாள் பாவேந்தரிடமிருந்து கடிதம் வந்தது. உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்தும் அவர் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. செம்பனார் கோயிலில் ஒரு சீர்திருத்தத் திருமணத்துக்குப் பாவேந்தர் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார். மணமகனுடைய நண்பர் ஒருவர் தலைவராக இருந்த பாவேந்தரின் ஒப்புதலைப் பெறாமல் வாழ்த்துப்பா ஒன்றைப் படிக்க வந்தார். 'என் இசைவு இல்லாமல் எள்ளும் அசையக்கூடாது. நல்லது கெட்டதுக்கு நான்தானே பொறுப்பு!" என்று சொல்லி வாழ்த்துப் பாவை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டார். இற்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யான் இசை மாணாக்கனாக இருந்த காலம் அது. ஒருநாள் பாவேந்தரிடமிருந்து ஒர் இனிய செய்தி வந்தது. "கோவையில் நாளிது 1950 ஆம்யாண்டு மேத் திங்கள் 27-28 ஆகிய நாட்களில் முத்தமிழ் வளர்ச்சி மாநாடு நிகழவிருப்பதால் நீவிர் இசையமுது பாடல்களைப் பாடுவதற்கு வந்து சேருக” என்று ஆணை பிறப்பித்திருந்தார்கள். காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த யான் பண்ணமைத்தது போக எஞ்சியிருந்த மற்ற பாடல்களுக்கும் இசை உரு போட்டுக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். முத்தமிழ் மாநாடு பாவேந்தர் அவர்களின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப் பெற்றது. பாவேந்தர் அவர்களின் மாநாட்டுத் தலைமை உரையுடன் காலை நிகழ்ச்சி முடிவுற்றது. மாலையில் இசைத்தமிழ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பற்பல இசைஞர்கட்கு இடையிலே பாவேந்தருக்குப் பிடித்தமான பாடல்கள் பலவற்றை நான் பாடிக் கொண்டிருந்தேன். தலைவாரி பூச்சூடி" என்ற இசையமுதுப் பாடலைப் பாடத் தொடங்க இருந்த என்னை நோக்கி "இதைத்தான் எல்லாரும் பாடுகின்றார்களே. நீ காலுக்குப் புன்னையிலை போலும் என்ற பாடலைப் பாடேன்” என்று அரங்கினர் அறிய அறிவித்தார் பாவேந்தர். அதன்படி அப்பாடலைப் பாடி ஒய்ந்ததும் எனக்குப் பின் பாடவிருந்த பாடகர் கோவை திரு. அருச்சுனன் என்பவர். "இது என்ன இசை? யார் இதை இப்படி இசைப்படுத்தியது?’ என்று ஒர் வினாவினை எழுப்பினார்.