பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நோபிள்பரிசுகிடைத்திருக்கும் பாவேந்தர் ஒரு முறை செட்டிநாடு வந்தபோது கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் வீட்டிற்கு வரும்படி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். வை.சு.சண்முகம் செட்டியார் கானோடு காத்தானின் குறிப்பிடத்தக்க பெருஞ் செல்வர்களில் ஒருவர். நான் அவர் வீட்டிற்குச் சென்று பாவேந்தரைப் பார்த்தேன். அதன்பிறகு பாவேந்தர் தெற்கு மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் எனக்குக் கடிதம் எழுதுவார். நான் சென்று அவரோடு இருப்பது வழக்கம். என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார். பாவேந்தர் பக்தி என்னை ஆட்கொண்டது. ராஜபாளையத்தில் பாவேந்தர் மீது பற்றுக் கொண்ட ஒர் இளைஞர்அணியைத் திரட்டினேன். பாவேந்தருக்கு ஒரு விழா எடுத்து அவருக்குப் பண முடிப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டேன். விழாவுக்கு ஒரு நாள் குறிப்பிட்டு அறிஞர் அண்ணாவையும், எழுத்தாளர் வ.ரா. வையும் அழைக்க முடிவு செய்தேன். அண்ணாவைச் சந்திக்கச் சென்னை புறப்பட்டேன். முல்லை முத்தையா அண்ணாவுக்குக் கடிதம் கொடுத்தார். கடிதத்தை எடுத்துக் கொண்டு அண்ணாவைப் பண்ருட்டியில் சந்தித்தேன். அண்ணா ஒத்துக் கொண்டார். வ.ரா.வைப் சந்தித்துக் கேட்டதும் அவரும் ஒத்துக் கொண்டார். விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினேன். விழா இராஜபாளையம் வடிவேல் ரைஸ்மில்லில் நடைபெற்றது. விழாவில் அறிஞர் அண்ணா, கவிஞர் வாணிதாசன், முருகையன், பாவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆஸ்துமாத் தொல்லையால் வ.ரா. வரவில்லை. பாவேந்தருக்குப் பொன்னாடை போர்த்தி ரூ. 2000/- பணமுடிப்பும் வழங்கப்பட்டது. விழா முடிவுற்றதும் நான் ராஜபாளையத்திலிருந்து மதுரைக்குக் குடிபெயர்ந்தேன். மதுரையிலும் பாவேந்தர் பணியைத் தொடர்ந்து செய்ய விரும்பிப் 'பாரதிதாசன் மன்றம்’ என்ற பெயரில் ஒர் அமைப்பை உருவாக்கினேன். அம்மன்றத்தின் சார்பில் திருக்குறள் வகுப்பு தொடங்கப்பட்டது. திருக்குறள் வகுப்பு யூனியன் கிறிஸ்டியன் ஹைஸ்கூலில் நடைபெற்றது. திருக்குறள் வகுப்பு நடைபெறத் தமிழாசிரியர் இராமையாப்பிள்ளை துணைபுரிந்தார். திருக்குறள் வகுப்புக்கு ஒரு வாரம் நாவலர் சோமசுந்தர பாரதி தலைமை தாங்கினார். மூன்று நாள் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பத்து நாள் பாவேந்தர் தொடர்ந்து பேசினார்.