பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பாவேந்தர் நினைவு போற்றுவோம் பின்னர் பாவேந்தர் பேசுகையில் ஏதோ மாணவன் அன்பழகன் பேசப்போகிறான் என்று சொன்னேன். இது, பேச்சா? இது பேச்சு. இப்படியா? மூச்சு விடக்கூட நேரம் வேண்டாமா?’ என்று சொல்லிவிட்டு, மற்றவர்களெல்லாம் பிறந்து வளர்ந்த பின்னர்தான் பேசுவார்கள். இவன் என்னடான்னா-பேசிக்கொண்டேதான் பிறந்திருப்பான் போலிருக்கு. என் நண்பர் கலியாணசுந்தரம் (மணவழகனார்) தந்த கொள்கைப் பயிற்சி. இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். ஆமாம்-அப்படித்தான் என்றார். தொடர்ந்து கவிஞர் “ஏதோ சீர்காழியிலே ஞான சம்பந்தன் பாடினாருன்னா-நல்லாத்தான் பாடினாரு தாளம் தவறாம-அது கடவுள் அருள் என்கிறார்கள். இப்பொழுது-மாணவன் அன்பழகன் பேசியது கேட்டோமே இது என்னவாம் என்று அவங்களை நீங்க கேளுங்கோ" என்று குறிப்பிட்டுப் பேசினார். அன்று கவிஞர்தங்கியிருந்த இடத்தில் அவருடன் இருந்து உரையாடி மகிழ்ந்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலரைக் குறித்தும் தன்மானக் கொள்ளைக்குள்ள ஆதரவு நிலை குறித்தும் ஆர்வத்தோடு கேட்டார். நான் அறிந்தவற்றைக் கூறினேன். அந்த ஆண்டில்-புதுச்சேரியில் சிறப்புடன் நடைபெற்று வந்த ஒரு தமிழ்ச்சங்கத்தில்-கல்லூரி மாணவர்கட்கு எனக் கட்டுரைப் போட்டியும், பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. அதில் நானும்: அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிலரும் கலந்து கொண்டோம். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள நான் சென்றபோது-புதுவை இயக்கத் தோழர் புவனகிரி இராமலிங்கம் அவர்களுடன் கவிஞர் இல்லம் சென்றேன். அன்பாக வரவேற்று என்னுடைய ஆர்வத்தை வாழ்த்தினார். அந்தப் போட்டிகளில், பேச்சு-கட்டுரை இரண்டிலும் எனக்கு முதற்பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அதைக் கேட்டு கவிஞருக்குப் பெருமகிழ்ச்சி. நண்பர்களிடம் எல்லாம் அதையே சொல்லித் தன்மான இயக்கத்தவர் தரம் எப்படி? என்று கேட்டார். அடுத்த நாள் மாலை அங்கிருந்த பிரஞ்சு ஆட்சியின் ஆளுநர் பரிசுகள் வழங்க இசைந்திருந்தார். மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி. மாலை ஐந்து மணிக்குக் கவிஞருக்கு ஒரு திடீர் எண்ணம் ஏற்பட்டு-நான் பூட்ஸ் (காலணி) போடாமல் கவர்னரிடம் சென்று பரிசு பெறுவது நன்றாக இராது. எனவே உடனே சென்று "கட்பூட்ஸ் வாங்கி வரவேண்டும் என்றார். நான் தயங்கினேன். அவரே என்னையும் அழைத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். கடைகளில் ஏறி இறங்கி, அளவு சரிபார்த்து வாங்கிக் கொண்டு திரும்புவதில்