பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - - 333 பொருந்தி நிற்பதாக வேண்டும் அல்லவா? உரைநடைபோல் கவிதையை நடைமாற்றம் செய்ய முடியாது" என்றார். "உரை நடையோ, கவிதையோ இரண்டும் எண்ணத்திற்குத் தரும் வடிவம் தானே?" என்றேன். 'பளிச்சென்று மின்னல்போல் தோன்றும் கவிதை, வெளியே புறப்பட உடை தேட முடியுமா?’ என்றார். "ஆனால். சில சொற்கள் பளிச்சென்று வேற்றுமொழியாக இருக்கின் றனவேதகத்தகாயம், சபாஷ், நிஜம், பிரசங்கம், உத்ஸாகம், க்ஷேமம், நிரபராதி, போசனம் போன்ற சொற்கள் தவிர்க்க முடியாதனவா?" என்றேன். பாவேந்தர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். "ஏன் முடியாது? முடியும்! அந்த நோக்கத்துடன் கவிதை இயற்றினால்” என்றார். அவரவர் பழக்கத்தில் அவரவர்க்கு அச்சொல் பொருள் வேகம் தருவது இயல்பு. எனினும் தவிர்க்கக்கூடிய சொற்களைத் தவிர்க்கலாம் என்றே எண்ணுகிறேன்" என்றார் கவிஞர். இந்த உரையாடல் நிகழ்ந்தது 1943ஆம் ஆண்டில், ஒருவகையில் பாவேந்தரின் பெருந்தன்மையான உள்ளம், தமிழ்ப்பற்றில் தவழ்ந்த அறிவு, இளைஞர்களாகிய எம்மிடம் உரையாடியதையே ஒரு மையக் கருத்தாகக் கொண்டு, தனித்தமிழ் குறித்துப் பிறகு ஆழ்ந்து எண்ணத் தலைப்பட்டது. அதன் பயன்தமிழர்களின் பெரும்பேறு எனத் தகுமாறு:தமிழியக்கம்' என்னும், தமிழை மாய்த்திடும் அறியாமையை எதிர்த்து உணர்வேற்றும் ஏடு தனித்தமிழ் காத்திடும் கொள்கை பரப்பும் கவிதை நூல் பிறந்தது. ஆம்! அரசியல் சீர் வாய்ந்தார்" என்னும் தலைப்பில் முழங்குவது இது. தெலுங்கு தமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்? நலங்கண்டீர் தமிழ் மொழியால் நற்றமிழை ஈடழித்தல் நன்றோ? வரிசையெலாம் காட்டுவதோ? வடமொழியும் பிழைத்தமிழும் பெருகிவிட்டால்