பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-இருபன் * 影 353 காப்பியங்கள் நிறைய எழுதினார். ஆனால் பாரதியின் முத்தமிழ்ப் பண்பைக் கைவிட்டு விட்டார். விருத்தம் பாடத்தகுந்தது என்பது பாரதிதாசன் கொள்கை விருத்தம் நாடகத் தமிழைச் சேர்ந்தது என்பது என் கொள்கை. பாரதிதாசன் அதை ஒத்துக் கொண்டார். - 'ஏன் அகவலும் பாடத் தகுந்தது என்று தானே முன்னோர் நினைத்தனர். ஆனால் அகவலை இன்னராகம் என்றில்லாமல் எல்லா ராகத்திலும் ராகமாலிகையாகப் பாடினர். விருத்திற்கென்று தனி ராகம் இருந்தது என்று கூறினார் பாரதிதாசன். அக்கூற்று உண்மை. "கலிப்பா நாடகத்தமிழ் முறையைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் உள்ள Odeம் கலிப்பாவும் ஒன்று" என்பது என் கருத்து. காப்பியப் பண்பைப் பற்றி ஓர் இலத்தீன் தொடர். அதன் பொருள் என்னவென்றால் "Begin.with the end என்பதுதான். இலியாதிலும் (Iliad) சுவர்க்க இழப்பிலும் (Paradise Lost) காப்பியம் முடியும் இடத்தில் தொடங்குகிறது. மேலும் படிப்பவன் கீழே வைக்க முடியாதபடி புதினத்தின் சுவையோடு (Novel interest) காப்பியம் தொடர்ந்து செல்ல வேண்டும். இப்பண்புகள் யாவும் சிலப்பதிகாரத்தில் தான் முழுக்க முழுக்க அமைந்திருக்கின்றன. வேறு தமிழ்க்காப்பியங்களில் இல்லை. இதை நான் பாரதிதாசனிடம் கூறினேன்; அவரும் ஒத்துக் கொண்டார். பாவேந்தரின் காப்பியங்கள் Episode போல அளவில் சிறியவனாக இருந்தாலும் அளவிறந்த, நுண்ணிய காப்பியப் பண்புகள் மிகுந்தவை; நிலை பேறுபெற்றவை. கவிஞர் பாரதிதாசன் பாரதிக்கு இரண்டுவிதமான பாதிப்புகள் உண்டு. வடமொழி இதிகாச-இலக்கியப் பாதிப்பு ஒன்று; மேலை நாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரின் பாதிப்பு மற்றொன்று. பாரதிக்குச் சங்க இலக்கியப் பாதிப்பு கிடையாது. பாரதிதாசனுக்குத் துவக்க காலத்தில் பாரதியின் பாதிப்பும் பிற்காலத்தில் சங்க இலக்கியப் பாதிப்பும் இருந்தன. என்றாலும் அவர் படைப்புகளில் பெரும் பகுதி அவருக்கே உரித்தான தனித்தன்மை மிக்கவை.