பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 பாலும் தெளிதேனும் திருக்குறளார் வீ. முனுசாமி தமிழ்நாட்டுப் பேச்சாளர்கள் சில சமயங்களில் மட்டும் பொறி பறக்கும் சிகரெட் லைட்டரைப் போன்றவர்கள். திருக்குறளார்-கொளுத்தியதிலிருந்து அணையும் வரை நகைச்சுவைப் பொறி பறக்கும் விழுப்புரம் மத்தாப்பு! இவர் அவசரமாக வீசி எறிந்த மத்தாப்பைச் சில பேச்சாளர்கள் தங்கள் கையில் எடுத்து வைத்துக் கொள்வதுண்டு. இவர் நகைச்சுவை கடன் வாங்காத சொந்தச் சரக்கு. திருக்குறளார் தமிழ்நாட்டு மார்க் ட்வைன்; சே! சே! அப்படிச் சொல்லக் கூடாது. மார்க் ட்வைன் அமெரிக்கத் திருக்குறளார். ஒரே பெரியார் ஒரே அண்ணா! ஒரே திருக்குறளார்! திருக்குறளார்.தமக்கே உரிய நகைச்சுவையோடு இக்கட்டுரையில் பாவேந்தரைப் பற்றிப் பேசுகிறார். பாவேந்தர் பாரதிதாசன் கடலூர் வந்தால், என் அச்சகத்திற்கும் வருவார். இலக்கியம் அரசியல் எல்லாம் பேசுவோம். பாவேந்தர் ஒர் இலக்கியப் பயில்வான். அவர் தோற்றம், பார்வை, பேச்சு யாவும் முரட்டுத்தனமாக இருக்கும். யாரையும், எதையும் வைத்துப் பார்க்கமாட்டார். எதைப்பற்றி உள்ளத்தில்... எப்போது என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே பலர் முன்னிலையில் கொஞ்சம் கூட அஞ்சாமல், கூச்சப்படாமல் போட்டு உடைத்து விடுவார். அது அவருடைய பண்பு. பின் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டார். சிதம்பரத்துக்கு அருகில் காட்டு மன்னார்க்குடியில் திருவாளர்