பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் o o 369 கூடக் காலையில்தான். இவ்விடத்தில் பாவேந்தரைப் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரி அரசியலில் அவரது திறமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பொறாமைக்காரர்களும், அவரது தமிழ்வாள் வீச்சின் முன் நிற்க முடியாதவர்களும் அவரைக் கொள்கை ரீதியில் எதிர்க்க முடியாமல் அவர் குடிக்கின்றார் என்ற குற்றச்சாட்டைத் தொடங்குவார்கள். அவ்வாறு பாவேந்தரைக் குறை கூறுபவர்களுள் பலர் பீப்பாய்க் குடியர்கள். அவர் காலத்துப் புதுச்சேரி அரசியல் தலைவர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் தாம். புதுச்சேரி மண்ணில் குடியின் வேர் ஆழமாக ஊன்றிக் கிடக்கின்றது. மன்றோரம் சொன்னார் மனையில் வேதாளம் சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் என்பார்கள். குடிவேர் விட்ட வீடும் குட்டிச்சுவராகிக் கிடக்கும் என்பதற்குப் பல சான்றுகள் புதுச்சேரி நகரத்தைச் சுற்றிக் கிடக்கும். பாவேந்தரின் அரசியல் பகைவர்கள் அவர் குடியில் இருக்கிறார்; குடித்தால் தான் பாட்டெழுதுவார்; அவர் குடிப்பதற்கு அளவேயில்லை!" என்றேல்லாம் பேசுவது வழக்கம். நான் பாவேந்தரை அருகிருந்து நீண்ட நாள் பார்த்தவன். அவர் சில சமயங்களில் குடிப்பதுண்டு. தினமும் குடித்தாக வேண்டும் என்ற நிலை அவருக்குக் கிடையாது. குடித்து விட்டுப் பாட்டெழுதும் பழக்கம் அவரிடத்தில் இல்லை. "சீச்சி! குடித்துவிட்டுப் பாட்டெழுதுவதா? என்று ஒரு முறையன்று, பலமுறை பாவேந்தர் கூறியிருக்கிறார். கண்ணதாசன், கம்பதாசன் போன்ற கவிஞர்கள் Mood உண்டாகக் குடிப்பதாகச் சொல்லிருக்கிறார்கள். பாவேந்தருக்குப் பாட்டெழுத அவ்வித Mood ஒன்றும் வேண்டுவதில்லை. எழுதத் தொடங்கினால் கையில் உள்ள சிகரெட் வாய்க்குப் போகாது. கொளுத்திய சிகரெட் ஒரு தடவை ஊதியது. மறுதடவை ஊதாமல் அப்படியே கையிலேயே சாம்பலானதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் எழுந்து தெளிவான உணர்விலிருந்து வருவது. நமக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சி அவருக்கு எப்போதோ உணர்வில் தோன்றிவிடுகிறது. 'வார்த்தைகள் அவரிடம் கைகட்டி நிற்கும்’ என்று வ.ரா.சொல்லுவார்; உணர்வும் அப்படித்தான். சில கவிஞர்களுக்கு உணர்ச்சி தள்ளுவண்டி போன்றது. பீடி, சிகரெட், சாராயம், கஞ்சா ஆகியவற்றைப் போட்டால் தான் அவர்கள் கவிதை வண்டி நகரும்.