பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 பாவேந்தர்-நான் கண்டதும் கேட்டதும் தனித்தமிழ் ஆர்வமும் தன்மான இயக்கப் பற்றும் பள்ளிப் பருவத்திலேயே என்னிடம் படிந்த பண்புகள். என் கெழுதகை நண்பர் முகுந்த ராமானுசம் பண்ருட்டியில் தி.க. வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர். அவருடைய தந்தை திருவாளர் கேசவநாயுடு பெரிய வைணவ பக்தர் என்றாலும் திராவிட இயக்கத் தலைவர்களும், பாவேந்தர் பாரதிதாசனும் பண்ருட்டி வந்தால் அவர் வீட்டில் தான் தங்குவர். நண்பர் முகுந்தன் என் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி, பாவேந்தருக்குச் செல்லப்பிள்ளை. நண்பர் முகுந்தனுக்கு வரும் திராவிட நாடு, குயில் ஆகிய இயக்க ஏடுகளைப் படித்து இயக்கப்பற்றையும், பாவேந்தர் பற்றையும் வளர்த்துக் கொண்டேன். பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற எனக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. எழுத்தராகப் பணியேற்றதும், கொஞ்ச நாட்களில் இரயில்வே அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பவராக (Sorterத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். உடனே எழுத்தர் வேலையை விட்டுவிட்டு அஞ்சல் துறைக்கு மாறினேன். முதன் முதலாகத் திருச்சிராப்பள்ளி தென்னுரில் பணி ஏற்றேன். - 1950-ஆம் ஆண்டில் நண்பர் முகுந்தனோடு பாவேந்தரைக் காணப் புதுச்சேரி சென்றிருந்தேன். என்னிடம் நலம் விசாரித்தார் பாவேந்தர். என் குடும்பச் சூழ்நிலை, என்தொழில், கவிதை ஆர்வம் ஆகியவை பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னேன். இளமையும், அழகும், திரைப்படத்துக்கேற்ற முகவெட்டும் பெற்றிருந்த என்னைக் கூர்ந்து கவனித்தார் பாவேந்தர். உங்களோடு தங்கிக் கவிதை எழுதக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். கவிதை எழுத எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்; முதலில் நான் சொல்வதைச் செய்; புலவர் ஏ.கே. வேலனுக்குக் கடிதம் கொடுக்கிறேன். சென்று பார்! உனக்கு நல்ல முகவெட்டும் குரல் வளமும் இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் எதிர்காலத்தில் நீ பெரிய நடிகன் ஆகலாம் என்று சொன்னார்; புலவர் ஏ.கே. வேலனுக்குப் பரிந்துரைக் கடிதம் ஒன்றும் தந்தார். இக்கடிதம் கொண்டு வருபவர் நல்ல பிள்ளை. அழகும் ஆற்றலும் மிக்கவர். முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு என்று கடிதத்தில் எழுதியிருந்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வெற்றிப்படத்தை எடுத்து, மிக