பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 43 சமாச்சாரம். நமக்கெதற்கு? இதோடு விட்டு விடுவோம்" என்றார் பொன்னடி. அதன்பிறகு நாங்கள் இருவரும் அதைப்பற்றிப் பேசுவதில்லை. சாப்பிட்டு முடிந்ததும் நானும் பொன்னடியும் விருந்து சாப்பிட்ட மேசை நாற்காலிகளை ஒழுங்கு செய்து ஒரிடத்தில் எடுத்துப் போட்டு விட்டுப் படுக்கப் போனோம். பாவேந்தரும் அந்த அதிகாரியும் இரவு 10 மணிவரை பேசிக் கொண்டு இருந்தார்கள். அதற்குமேல் அந்த அதிகாரி விடைபெற்றுக் கொண்டு சென்றார். பாவேந்தர் படுக்கையில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். சமையற்காரத் தாயாரம்மாள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு நடுக்கூடத்தில் வழக்கம்போல் படுத்துக் கொண்டார். நானும் பொன்னடியும் முன்னாலிருந்த வரவேற்பறையில் படுத்திருந்தோம். பாவேந்தரோடு பழகத் தொடங்கிய இந்த ஒரு வாரத்தில் இன்று எனக்குப் புது அனுபவம். பாவேந்தர் மது அருந்துவார் என்று கேள்விப்பட்டதுண்டு; ஆனால் நேரில் பார்த்ததில்லை. என்னைக் கண்டு அவர் நாணுவாரோ என்ற அச்சத்தால் அவர் விருந்துண்ணத் தொடங்கியதிலிருந்து நான் அவர் கண்ணில் படாமல் இருந்தேன். சாப்பிட்ட பிறகும் அவர் கண்ணில் படாமல் படுத்துக் கொண்டேன். இதைக் கவனித்திருப்பார் என்று எண்ணுகிறேன். இரவு 10.30 மணிக்கு முருகு' என்ற குரல் பாவேந்தர் அறையிலிருந்து கேட்டது; எழுந்து ஓடினேன். பாவேந்தர் எந்தவித மாறுபாடும் இல்லாமல் கம்பீரமாக, அமைதியாகப் படுக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். நான் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். இருவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். பிறகு பாவேந்தரே தூக்கம் வரன்ல என்று பேச்சைத் துவக்கினார். பிறகு அன்று நிகழ்ந்த பெருமன்றத் துவக்க விழா பற்றியும், விழாவுக்கு வந்திருந்த கவிஞர்களைப் பற்றியும் பேச்சுத் திரும்பியது சகுந்தலாபாரதி அவர் தந்தை போலவே இருப்பதாக நான் சொன்னேன். பாவேந்தரும் "ஆமாம்! பாரதி நல்ல உயரம்; ஒடிசலான உடம்பு, பொன்னிறம்; சுடுவது போன்ற பார்வை; துடிப்பான மீசை பாரதியின் ஆற்றல் முழுமை பெற்றிருந்த நேரத்தில் பிறந்த பெண் சகுந்தலா. சகுந்தலா என்று இந்தப் பெண்ணுக்குப் பாரதி பெயர் வைத்ததற்கு முக்கியக் காரணம் உண்டு. பாரதி புதுச்சேரியிலே இருந்தபோது வ.வெ.சு. அய்யர், வ.ரா.முதலிய நண்பர்களோடு கூடிக் காளிதாசனின் சகுந்தலையை நாடகமாக நடிக்கத் திட்டமிட்டார். ஒத்திகையும் நடந்தது. அதில் பாரதி