பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 51 எனக்குத் தான் முதல் மதிப்பெண் கிடைக்கும்’ என்று பேசிக் கொண்டார்கள். நான் வாயே திறக்கவில்லை; மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். புதுவைக் கல்வி இயக்குநரின் செயலாளராக இருந்த திரு. கையார் என்பவர் என் தந்தையின் நெருங்கிய நண்பர். அவர் என்னை கூப்பிட்டு, “சுப்புரத்தனம்! தமிழாசிரியர் வேலைக்கு ஒரே ஒரு இடம்தான் காலியிருக்கிறது. அதுவும் நிரவியில்தான். நியாயமாக அந்த இடம் உனக்குத்தான் கிடைக்கவேண்டும். காரணம் நீதான் முதன்மையாகத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாய். அதுவு மில்லாமல் நீ அரசாங்க உதவித்தொகை பெற்றுப் படித்தவன். சட்டப்படி அரசாங்க உதவித்தொகை பெற்றுப் படித்தவனுக்குத் தான் முழுச்சலுகை. உன்னிடத்தில் உள்ள ஒரே குறை நீ உருவத்தில் மிகச்சிறியவன்; பொடியன். நீ நேர்முகத் தேர்வுக்கும் வரும்போது இரண்டு மூன்று சட்டையணிந்து, அவைகளுக்கு மேல் ஒரு கோட்டும் அணிந்து வரவேண்டும். உன்னை உயரமாகக் காட்டிக் கொள்வதற்காகக் குதியுயர்ந்த பூட்சு போட்டுக் கொண்டுவா. கல்வி இயக்குநரிடம் தைரியமாகப் பேசு! நான் உதவித்தொகை பெற்றுப் படித்தவன்; எனக்குத்தான் வேலை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் ஆளுநரைச் (Governor) சென்று பார்ப்பேன் என்று சொல்லு. நான் அருகில்தான் இருப்பேன்" என்று கூறினார். வீட்டுக்கு வந்து தந்தையிடமும் சொன்னார். தந்தை என்னைக் கூப்பிட்டு, “என்ன, கையார் சொன்னபடி சொல்வாயா?” என்று கேட்டார். “என்னப்பா? இதுகூடவா என்னால் சொல்ல முடியாது” என்று தந்தையிடம் நான் கூறினேன். நேர்முகத் தேர்வும் வந்தது. கையார் சொன்னபடி உடையணிந்து சீஃபின் (கல்வி இயக்குநரை அங்கு சீஃப் என்றே அழைப்பார்கள்.) முன்னால் போய் நின்றேன். கொஞ்சமும் அஞ்சாமல் கையார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தேன். சீஃப் அருகிலிருந்த செயலாளரான கையாரைப் பார்த்து, "அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா?’ என்று கேட்டார். கையார் சட்டத்தை உடனே எடுத்துக் காட்டினார். "சரி நீ போ வேலை உனக்குத்தான்" என்று சீஃப் சொன்னார். கையார் அன்று மாலையே அலுவலில் சேர்வதற்குரிய ஆணையைக் கையோடு வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார்.