பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அந்தநாட்கள் போனேன். ஒப்பந்தம் எழுதிக் கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்தேன். மற்ற எழுத்தாளர்கள் செய்வதுபோல், நானும் அந்த மேலாளரை உடன் அழைத்துச் செல்லாததால் அவருக்கு என்மேல் எரிச்சல்! நடுக்கொள்ளைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று கோபம். இந்தச் செய்தியை முன்கூட்டியே சொல்லாமல் இருந்ததற்காக எனக்குப் பணியாளாக இருந்த சிறுவனை அந்த மேலாளர் நையப் புடைத்து விட்டார். அந்தப் பையன் அழுதுகொண்டு நேராக டி.ஆர்.எஸ். பங்களாவுக்கு வந்தான். பங்களா வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்தவன் அந்த மேலாளரின் கையாள். அவன் அச்சிறுவனை உள்ளே விட மறுத்து விட்டான். நான் வெளியே வந்ததும் அப்பையன் அழுது கொண்டே நடந்ததைச் சொன்னான். என் சினமெல்லாம் அச்சிறுவனை உள்ளேவிட மறுத்த வாயிற்காவலன் மேல் திரும்பியது. என் கோபம் தீரும்வரை அவனை விளாசினேன். அவன் அடிபொறுக்காமல் கூக்குரலிட்டதும் உள்ளே இருந்த டி.ஆர்.எஸ். வெளியில் வந்தார். நான் அடித்து முடிக்கும் வரையில் எதுவும் பேசாமல் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார், ஏன்? என்று என்னை எதுவுமே கேட்கவில்லை. நான் என் அறைக்குத் திரும்பியதும் டி.ஆர்.எஸ். ஓர் ஆளை அனுப்பி வாயிற்காவலனை அடித்ததற்குக் காரணம் கேட்டிருந்தார். நான் நடந்தவற்றையெல்லாம் விரிவாக அந்த ஆளிடம் சொல்லி, முன்பணத்தில் ரூ. 100 எடுத்துக்கொண்டு மேலாளர் முதலில் எழுதி வைத்திருந்த குறிப்பையும் கொடுத்தனுப்பினேன். அடுத்த நாளே அந்த மேலாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான வளையாபதியை மாடர்ன் தியேட்டர்ஸார் படமாக எடுக்க முடிவு செய்தார்கள். நான் அதற்குக் கதை வசனம் எழுதினேன். அப்படத்தை டி.ஆர்.எஸ். டைரக்ட் செய்யவில்லை. டைரக்டர் ரகுநாத் இயக்கினார். டி.ஆர். சுந்தரத்துக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால் அவர் ஒய்வெடுத்துக் கொள்ள கே.எல்.வி. வசந்தாவோடு ஃபிஜித் தீவு சென்றிருந்தார். டைரக்டர் ரகுநாத் வளையாபதியில் நான் எழுதிய திரைக்கதை வசனத்தின் சில பகுதிகளை என்னைக் கேட்காமல் திருத்தியும், வெட்டியும் எறிந்து விட்டார். இதைக் கேட்டதும் எனக்கு அடக்க முடியாத சினம் மூண்டது. டி.ஆர்.எஸ். ஃபிஜியிலிருந்து திரும்பிவந்து விட்டார். வளையா பதிக்குப் பின் ஒப்பந்தம் செய்யப்பட்ட படமொன்றுக்குச் சில காட்சிகள் வசனம் எழுதியிருந்தேன். மொத்தம் மாடர்ன்