பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நினைவில் நின்றவை திராவிட நாடு, முரசொலி, பொன்னி, மன்றம், திராவிடன், தென்றல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும் பரபரப்போடு இப்பத்திரிகைகளை நடத்தி வந்தனர். எல்லா இதழ்களும் பாவேந்தர் படைப்பை விரும்பி வெளியிட்டன. 1942-43இல் திராவிட நாட்டில் பாவேந்தர் பாட்டு தொடர்ந்து வரும். அவர் பாடல் எழுதாத வாரத்தில் அவருடைய பழைய பாடலைத் தேடி எடுத்துத் திராவிடநாடு வெளியிடும். பாவேந்தர் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் நடைபெற்ற எல்லா அரசியல் கலை ஏடுகளிலும் எழுதினார். இவர் நண்பர்கள் உதவியோடும், தாமாகவும் சில இதழ்கள் நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் முதன்முதலாகக் கவிதை இதழ் நடத்தியவர் பாவேந்தர். கி.பி. 1935இல் வெளியான பூரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலம் என்ற இதழே அது. முழுக்க முழுக்கக் கவிதையில் வெளிவந்த அவ்வேட்டில் விளம்பரங்கள் கூடக் கவிதையிலே வெளியாயின. திரு. தம்புசாமி முதலியார் என்பவர் அதன் பதிப்பாசிரியர்; பாவேந்தர் ஆசிரியர். திரு.நோயல் நடத்திய புதுவை முரசு'க்கும் பாவேந்தருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பாவேந்தர் பத்திரிகைத் துறைப் பட்டறிவை இந்த இதழில் தான் கூர்மையாக்கிக் கொண்டார். பாவேந்தரின் நிதியளிப்பு விழா முடிவுற்றதும் சூட்டோடு சூடாக 1947ஆம் ஆண்டு குயில் திங்களிதழ் நூல் வடிவில், உயர்ந்த தாளில் வண்ணப் படங்களோடு வெளிவந்தது. அத்தகைய ஒரு கவிதை இதழ் தமிழில் மறுபடித் தோன்றவே இல்லை. பாவேந்தராலும் வெளியிட முடியவில்லை. பாவேந்தரின் முதல் குயில் சில இதழ்களோடு தன் குரலை ஒடுக்கிக் கொண்டது. குயிலின் உரிமை காரணமாகப் பாவேந்தருக்கும் டி.என். இராமனுக்கும் ஏற்பட்ட வழக்கும் பின்னர் குயில் பாவேந்தரை வந்தடைந்ததும் யாவரும் அறிந்த செய்திகள். பிறகு பத்தாண்டுகள் கழித்துக் குயில் மீண்டும் 1.6.58லிருந்து புதுவைச் சோலையில் கூவத் தொடங்கியது. அதன் இசை தொடர்ந்து இரண்டாண்டு ஏழு திங்கள் தமிழ் இலக்கிய உலகில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாவேந்தர் பாண்டியன் பரிசைத் திரைப்பட மாக்கும் முயற்சியோடு சென்னை வந்ததும் குயில் நின்றுவிட்டது. மீண்டும் 15.4.62இல் சென்னையிலிருந்து துவங்கியது. எட்டு இதழ்கள் வெளிவந்தன. பாவேந்தரின் பத்திரிகைத் துறை அனுபவம் இத்துடன் முற்றுப்பெற்றது. இக்குயிலைப் பாவேந்தர் வருவாய் கருதி நடத்தவில்லை. ஒரு கொள்கை வெறியோடு நடத்தி வந்தார். இக்குயில் ஏடு அன்றைய படித்த, தமிழ் ஆர்வமிக்க இளைஞரிடையே