பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் கேட்டதும் பெரியார், ஸ்டாலின் போன்ற சில அரசியல் தலைவர் களின் படத்தைப் பார்த்தவுடன் ஒருவித அச்சங்கலந்த மரியாதை நம் உள்ளந்தில் நம்மையறியாமலேயே ஏற் படுவதை உணர்கிருேம், பாவேந்தர் பாரதிதாசனின் உருவப்படத்தை முதன் முதலில் பார்த்தபோதும் அத் தகைய உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் பள்ளி மாண வகை இடைப்பாடியில் படித்துக் கொண்டிருந்தபோது திராவிடர்க் கழகம் பிரியாமல் செயல்பட்டுக் கொண்டிருந் தது.கி.பி.1946 ஆம் ஆண்டில் திருவாளர்கள் அன்பழகன், நாவலர் இளந்தாடி நெடுஞ்செழியன், டார்பிடோ ஜனுர்த்தனம் ஆகிய மூவரும் கல்லூரிப் படிப்பை முடித்துக்