பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/132 பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டதும் அம்மயானத்தி லேயே ஓர் இரங்கற் கூட்டமும் நடைபெற்றது. யாரோ ஓர் புதுவைப்பிரமுகர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர், திருவாளர்கள் ம.பொ.சி, ஈ.வி.கே. சம்பத். கவி கா.மு. ஷெரீஃப், இரா. நெடுஞ்செழியன், மு. கருணுநிதி, என். வி. நடராசன், கண்ணதாசன், சுப்பையா (பொதுவுடை மைக் கட்சித்தலைவர்), குத்துசி குருசாமி ஆகியோர் பேசினர். அவ்வை திரு.டி.கே. சண்முகம் துன்பம் நேர் கையில் 'உலகப்பன்' ஆகிய பாவேந்தர் பாடல்களைப் பாடினர். பாவேந்தரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மயிலை லோகநாதன் என்ற தி. க. நண்பர் மாரடைப்பால் உயிர் துறந்தார்.