பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/141 பிற்சேர்க்கை 1 பாரதிதாசன் மீசை* (14ம் பக்க அடிக்குறிப்பிற்குரியது) களிற்றுகிரை பலவற்றை வெற்றி கண்டு காடதிர வேமுழங்கி இறுமாப் போடு மலைக்குகையில் வீற்றிருக்கும் அரிமாப் போல மாக்கவிஞன் வீற்றிருந்தான்; வாயில் இட்டுக் குழைக்கின்ற புகையிலையைச் சுருட்டாய்ச் சுற்றிக் குண்டலமாய்ப்.புகைவிட்டான்; அவன் தமிழ்வாய் விளைக்கின்ற கரியபுகை தமிழ் மணந்து வீசியது காற்புறமும் வியப்பில் ஆழ்ந்தேன். "பெண்ணின்பம் தனைவடித்துப் பண்ணைக் கூட்டிப் பேரின்பப் பாடல்களாய் ஆக்கித் தந்த வெண்ணெய்ச்சொல் பாரதிக்குத் தாச உம்மை வேடிக்கை யாய்,ஒன்று கேட்க ஆசை! எண்ணிச்சொல்! பாரதியின் முறுக்கு மீசை இமயத்தைப் போல்கிமிர்ந்து விண்ணேக் குத்தக் கன்னத்தில் மோதுகின்ற உமது மீசை கவிழ்ந்துகிலம்:கோக்குவதேன்?" என்று கேட்டேன். ’பாவேந்தர் மீசை பற்றி தொடக்க நிலையில் ஆசிரியர் ப்ாடிய பத்து எண்சீர் விருத்தங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன.