பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்/31 மிகவும் தீவிரமாக அரசியல் பேசுவார்; எழுதுவார். கவி ஞர் தஞ்சைவாணன், கோவிந்தராசன் போன்றவர்கள் அவரைக் கட்சி அரசியலில் இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தார்கள். அப்போது தி. மு. க. விலிருந்து சம்பத் பிரிந்து தமிழ்த் தேசியக் கட்சியைத் துவக்கி 62 தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம். ‘சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கப் போகிறேன்’ என்று முழக்கமிட்டுச் சென்னை நகரில் சம்பத் ஆர்ப்பாட்டமான தேர்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். சென்னை நகரம் எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வரவேற்பு வளைவுகளோடு விழாக் கோலந் தாங்கிப் புதுமணப் பெண் போல் காட்சியளித் தது. தமிழ்த் தேசியக் கட்சியின் போர் ஆரவாரத்தைக் கேட்டு, வெளியிலே காட்டிக்கொள்ளாத குலை நடுக்கத் தோடு தி. மு. க. இருந்த நேரம். பாவேந்தரைத் தேர் தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகச் சம்பத்தின் தூது வராகத் தஞ்சைவாணன் வந்திருந்தார். வந்த வேலையை யும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாவேந்தரின் இசைவோடு தஞ்சைவாணன் விடைபெற்ருர். டித்துப் பட்டம் பெற்ற, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட இளைஞர்களேக் கண்டால் பாவேந்தருக்கு மிக வும் பிடிக்கும். பட்டதாரி இளைஞர்களைத் தம்முடன் அழைத்துச் செல்வதிலும், அவர்களை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதிலும் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. என்னை மற்றவரிடம் 'பெரிய கவிஞர்', 'புரொப சர் என்று அவர் வாயால் கூறி அறிமுகப்படுத்தும் போது நான் மிகவும் வெட்கப்படுவேன். பாவேந்தர் தனி யாக இருக்கும்போது, 'ஐயா! நான் பெரிய கவிஞனு மில்லை; புரொபசருமில்லை; என்னே ஏன் அளவுக்கு மீறி உயர்த்திக் கூறுகிறீர்கள்' என்று கேட்பதுண்டு.