பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/52 அதன் பிறகு இருவரும் இரண்டாவதாட்டம் திரைப்படம் பார்ப்பதற்காகச் சென்ருேம். வழக்கமாக நாங்கள் ஆங் கிலப் படம் பார்க்கத்தான் செல்வது வழக்கம். ஆனல் இன்று 'நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற தமிழ்ப் படம் பார்க்கச் சென்ருேம். சென்னையில் பாவேந்தரோடு வெளி யில் செல்லும் நேரங்களில், அவரைச் செலவு செய்யும்படி நான் அனுமதிப்பதில்லை. போதிய அளவு என் சட்டைப் பையில் பணமிருந்தால்தான் அவரோடு வெளியில் செல் வேன். இல்லாவிட்டால் செல்லமாட்டேன். இது அப் போது நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்த கொள்கை. படம் புதுமையாக இருப்பதாகச் சொல்லி நான் தான் அவரை அழைத்துச் சென்றேன். பையில் ஏழெட்டு ரூபாய் பணம் இருந்தது. டிக்கெட்டுக்கும் டாக்சிக்கும் போதும் என்று நினைத்தேன். கொஞ்சம் காலம் தாழ்த்திச் சென்ற தால் டிக்கெட் கிடைக்கவில்லை. வெளியிலே "பிளேக் கில் வாங்கிக் கொண்டு கொட்டகைக்குள் நுழைந்தோம். கை யில் நான் கொண்டு வந்திருந்த பணம் கிட்டத்தட்டச் செலவாகிவிட்டது. இடைவேளையில் வெளியில் எழுந்து வந்தோம். கவிஞர் தாகமாக இருக்கிறது என்று சொல்லி உள்ளே இருந்த கடைக்குச் சென்று 'கோகோ கோலா" கேட்டார். அவனும் சட்டென்று உடைத்துக் கையில் கொடுத்து விட்டான். 'என்ன விலை?" என்று கடைக் காரனைக் கேட்டேன். அவன் 'அறுபது காசு என்று சொன்னன். என் சட்டைப் பையில் இருந்த சில்லரை களைப் பொறுக்கி எண்ணிப் பார்த்தேன். ஐம்பது காசு தான் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. 'உங்களிடத்தில் காசு இருக்கிறதா?’ என்று கவிஞரைக் கேட்டேன். அவரும் 'நான் பணம் எதுவும் எடுத்து வரவில்லையே! இப்போது என்ன செய்வது?" என்று கலவரத்தோடு கேட்டார். காசைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அருகில் உள்ள யாரிடமாவது வாங்கிக் கொடுத்துவிடலாம். ஆளுல்