பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்|54 [...] 14–2–62 புதன் ■ இன்று கவிஞர் தமிழழகனும், காலஞ்சென்ற குழந்தைக் கவிஞர் நாக. முத்தையா அவர்களும் பாவேந்தர் இல்லத் துக்கு வந்திருந்தனர். தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தை எவ்வாறு வளர்ப்பது? எவ்வாறு செயற்படுத்துவது? என் பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தில் உலகின் பலநாடுகளில் இருக்கும் தமிழ்க் கவிஞர்களையும் திரட்டிப் பங்குபெறச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்தோம். அன்றே மலைநாட்டு (மலேசியா சிங்கப்பூர்)க் கவிஞர்களுக்கு அறிக்கை ஒன்றும் எழுதப் - . لتھ۔ا نا لا அன்று எண்சீர் விருத்தம்பற்றி எங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார். "இந்த நூற்ருண்டில் எண்சீர் விருத்தத்தில் பல உத்திகளையும், கையாண்டு அதை நன்கு விளம்பரப் படுத்தியிருக்கிறேன். இன்று கவிதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கன், எண்சீர் விருத்தத்தைத் தான் எழு திப் பழகுகிருர்கள். அந்த அளவு அதை ந்ான் கவிஞர் களுக்கு எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். இதைப் போலவே சிறு சிறு கருத்துக்களைக் கருவாகக் கொண்ட கட்டளைக் கலித்துறைகள் எழுதி அதையும் நன்கு விளம் பரப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம்' என்று கூறினர். கூறியபடியே இரண்டு நாட்களில் அழகிய கட் டளைக் கலித்துறை ஒன்று அவர் கற்பனையில் வெளிப்பட் டது .