பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை; சுவையானவை. தமிழ் மக்களுக்குப் புராணந்தான் எழுதத் தெரியும். வரலாறு எழுதத் தெரியாது; அதனுல் நம்மை காமே தொலைத்து விட்டு இப்போது குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிருேம். ஆங்கில நாட்டில் வோர்ட்ஸ்வொர்த்தின் முக்குக்கும் கீட்சின் தலைமயிருக்கும் ஆராய்ச்சி உண்டு. இலக்கியமேதை வால்டயரின் கைப்பிரம்பு 500 பிராங்குக்கும் மோலியர் என்ற பிரெஞ்சு நாடகாசிரியன் உட்கார்ந்திருந்த நாற்காலி 725 பிராங்குக்கும் ஏலம் போயின. மேலைநாட்டார் கவிஞன்வரலாற்றின் மீதும் கலைஞன் கைபட்ட பொருள் மீதும் எவ்வளவு ஆர்வங் காட்டுகிருர்கள் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.