பக்கம்:பாவைப் பாட்டு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§).um. 109

மாதவம் செய்திட வேண்டும் அம்மா’ என்பர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஏனெனில் ‘அவர் பங்கயக்கை நலம் பார்த்துத்தான் பாரில் அறங்கள் வளருமம்மா’ என்று மேலும் குறிப்பிடுவர். உமை அம்மை ‘அறம் வளர்த்த நாயகி யாகத் திகழ்கிறாள். சிவன் அளித்த இருநாழி நெல் கொண்டு காஞ்சிபுரத்தில் காமாட்சியாகக் கணக்கற்ற அறங்களை இயற்றினாள் என்று நூல்கள் கூறும்.

உலக வழக்கில் இன்ன ஆணினுடைய மனைவி தான் இவர் என்று பெண்ணை அறிமுகப்படுத்தும் மரபு உளது. ஆனால் தமிழின் தொல்பழம் வழக்கு இவ்வாறில்லை. திருமுருகாற்றுப்படையில் முருகப் பெருமானை நக்கீரர் பெருமான் “மறுவில் கற்பின் வாணுதல் கணவ’ என்று குறிப்பிட்டுள்ளார். “குற்றமற்ற கற்பினையுடைய தெய்வ யானையின் கணவனே என்பது இத்தொடரின் பொருளா கும். அது போன்றே ஈண்டு அணங்கின் மணவாளா” என்று உமையம்மையாரின் கணவனே என்று சிவபெரு மான் அழைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இவ்வாறு பெண்ணைக் கூறி, அப்பெண்ணின் கணவனே என்று அழைக்கும் மரபினை நோக்கப் பெண்ணின் பெருமை விளங்கும். குறுந்தொகைப் பாட்டொன்றிலும் தலைவன் ஒருவன் ‘நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற யாம் நானுகம் சிறிதே’ என்று குறிப்பிடுவதும் நோக்கப் பெண் பெற்ற பெருவாழ்வு விளங்கும். நல்ல. உத்ததமான பெண்ணின் கணவனாக விளங்குவது என்பது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.

அடுத்து, “செப்பு உறுகமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே’ என்றார். சிவப்பு நிறம் வாய்ந்த தாமரை மலர்கள் விரிந்துள்ளகுளிர்ச்சி பொருந்திய வயல்களாற் குழப்பட்ட திருப்பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/110&oldid=592157" இலிருந்து மீள்விக்கப்பட்டது