பக்கம்:பாவைப் பாட்டு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினாறாவது திருப்பாடல்

இறையருள் நிலை இதுவென்று கூறியருளிய மணிவாசகப் பெருந்தகையார், முன்னிக் கடலைச் சுருக்கி’ எனத் தொடங்கும் இத்திருப்பாட்டில் சிவானுபவ நிலைக்குக் காரணமாகத் திகழ்வது இறைவன் தன் கணக்கிலாத் திருவருளே என்று கூறி, அத்திருவருள் உயிர்களுக்குக் கிட்டும் நிலையினை மழையெனும் எடுத்துக்காட்டுத் தந்து விளக்கு கின்றார்.

கன்னியர்கள் முதலில் மழை மேகத்தினை வாழ்த்து கிறார்கள். மழையே! கடலை முன்னிச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டு இடையின் மின்னிப் பொலிந்து, எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பு இன் சிலம்பி, திருப்புருவம் என்ன சிலை குலவி, நம் தம்மை ஆளுடையான் தன் னில் பிரிவிலா எம் கோமான் அவள் அன்பர்க்குள் நமக்கும் முன் முன்னிச் சுரக்கும் இன் அருள் என்னப் பொழியாய்’ என வேண்டுகின்றனர்.

சிவனார் திருவடிகளை வாயாரப் புகழ்ந்து பாடி நீராடு கின்ற கன்னியர்கள் தடாகத்து நீரைக் கண்டு, அது மழை பொழிந்ததன் பயனால் வாய்த்தது என்று கருதி, அதனைச் சிவனும் உமையும் திருவருளைச் சொரிந்து நிற்கின்ற தன்மையாக நீரைப் பொழிவாய் என்று போற்றத் தொடங்கி, முதற்கண் மழையை விளிப்பாராய் மழையே’ என்றார். ஈண்டு மழை என்பது ஆகுபெயராய் மேகத்தை உணர்த் தியது. மேகத்தை விளித்த அவர், அதன் படிப்படியான செயல்களைத் தொடர்ந்து சிந்திப்பாராய் வெண்முகிலாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/64&oldid=592339" இலிருந்து மீள்விக்கப்பட்டது