பக்கம்:பாவைப் பாட்டு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 65

அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் திறம் ஒக்கும் என்பர்ரி தம்தம் ‘ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் என்றனர்.

இக்கன்னியர்கள் உமாதேவியாரை ‘நந்தம்மை யாளுடையாள்” என நவின்றனர். ‘உடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ என்பது, “உண்ணாமுலை உமையா ளொடு உடனாகிய ஒருவன்’ என்றும், வண்டார் குழல் அரிவையொடு பிரியா வகைபாகம் பெண் தான் மிகவானான்’

என்றும் திருஞானசம்பந்தர் (வேணிபுரப்பதிகம்')” கூறியுள்ளமை கொண்டு அறியலாம். மேலும் மணிவாசகரே கோயில் மூத்த திருப்பதிகத்தில் (1) உடையாள் உன்றன்

நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி என்றும் குறிப்பிட்டுள்ளதனால் உமையொடு உடனுறிையும் இறைவன் திறம் காணப் பெற்றோம்.

இத்திருப்பாட்டு, பாவைப்பாட்டின் உறுப்பாயுள்ள மழை வேண்டுதலைக் குறித்து நின்றதாகும். இத்திருப் பாட்டில் உமாதேவியாரை உடையாள், எம்மை யாளுடை யாள், எம்பிராட்டி நந்தம்மையாளுடையாள், அவள் என ஐமுறையாகப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐந்து வகையாக இறைவி குறிக்கப்படுவது அவள் ஐந்து சக்திகளாக அமைந்து உயிர்களுக்குப் பேரின்பத்தைக் கூட்டுதற் பொருட்டே என்பர். உலகின் நலம் குறித்து மழை பொழிவது போல, உயிர்கள் நலம் குறித்து அருள் பொழிய வேண்டும் என்று ஆண்டவனைக் கன்னியர் வேண்டினர் என்று கொள்ளலாம்.

அருளே யுல்கெல்லாம் ஆள்விப்பது ஈசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/66&oldid=592342" இலிருந்து மீள்விக்கப்பட்டது