சி.பா. 83
கற்றவர் தொழுதேத்தும் சீர்கரையூரிற்
பாண்டிக் கொடிமுடி கற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும்கா
நமச்சி வாயவே
என்பர்.
காரைக்காலம்மையாரும், இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல
உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் மகிழ்ந்து அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்றார் என்று இறைவன் திருவடியின் கீழ்த் தங்கியிருத்தலையே வேண்டியதாகச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுவர்.
ஐந்தொழில்களையும் இயற்றும் திருவடிகள் தம்மைக் காத்தருள வேண்டும் என்று கூறிய கன்னியர்கள் அவ்விறைவனை வாழ்த்துவதற்குக் காரணமாயிருந்தது மார்கழி நீராயினமையின் அதுவும் தம்மைக் காத்தருள்க வென்பார் போற்றியாம் மார்கழி நீராடு’ என்றார்”
“போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்” என்று சிவன் திருவடிகளைச் சிறப்பித்துப் பேசிய கன்னியர்கள் பொய்கை நீரையும் ஏத்திப் போற்றி வீடு திரும்பினர்.
இவ்வாறு போற்றியருளுக எனத் தொடங்கி போற்றி யாம் மார்கழி நீராடலோர் எம்பாவாய்’ என முடிகின்றது.
போற்றி அருளுகநின்
ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக கின்
அந்தமாம் செந்தளிர்கள்