பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிடியும் களிறம்

வது போலக் கனவு காண்பேன். திடீரென்று கனவு குலேந்து விழித்தால், கண்டது கனவென்பது தெளிந்து, படாத பாடுபடுவேன். இனிமேல் நனவிலே நிகழும் புணர்ச்சி நிகழுமென்கிருய், அப்படியால்ை அந்தப் பழைய கனவிலே தோன்றும் புணர்ச்சியைப் போக்கி விடலாம்; அப்படித்தான் அல்லவா?

தோழி : ஆம்.

தலைவி நனவிற் புணர்ச்சி நடக்கலும், அப்போதே கனவிற்

புணர்ச்சியை வேண்டமாட்டோம்; அல்லவா?

புனவேங்கைத் தாதுஉறைக்கும் யொன் அறை முன்றில்

கனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்ருே?

நனவிற் புணர்ச்சி நடிக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்ருே?

(தினைப்புனத்தில்.வேங்கை மலரின் தாது கீழே உதிரும் :பொன்னிறம் பெற்ற பாறையாகிய முற்றத்தில், நனவிலே நடந்த புணர்ச்சி இங்கே நடக்கும் அல்லவா? அவ்வாறு நனவிலே நடக்கும் புணர்ச்சி இங்கே நிகழ்ந்த வுடன் அ போதே, இதுகாறும் நிகழ்ந்த கனவிலே காணும் புணர்ச்சியை விரும்பாமல் போக்கி விடுவோம் அல்லவா? -

இனிமேல் எப்போதும் இல்லத்தில் தலைவனுடன் இருந்து வாழலாமென்றும், முன்போல் அவனைக் காணுமல்

கனவிலே கண்டு கலங்குவதற்கு அவசியம் இல்லையென்றும் சொன்னுள்.

புனம்-தினைக்கொல்லை. உறைக்கும்-திரும். அறைபாறை. முன்றில்-முற்றம், முன்னிடம். நனவில்புணர்ச்சிதனவிலே உண்மையாக நிகழும் புணர்ச்சி நடக்குமரம்