பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. ஆறுமுகம் 19 1. ருதுஸ்நானம் என்று கூறப்படும் மாதவிடாய் (Menstruation) நின்று விடுவது கருவுற்றிருப்பதை அறிய ஒர் அடையாளமாகும். - நல்ல ஆரோக்கியமான உடல் செழிப்பம் கொண்ட பெண் குடும்ப வாழ்க்கையினை மேற்கொண்டு ஒழுங்கு முறையுடன் மாதவிலக்கு ஏற்பட்டு, பிறகு மாதவிலக்கு நின்றுவிடும் பட்சத்தில், அந்நிலையே கருவுற்றிருப்பதற் குரிய அடையாளமாகும். - வாய்வு நோய் காரணமாகவோ, ரத்தக் குறைவு. காரணமாகவோ அல்லது வேறு வயிறு சம்பந்தப்பட்ட குறைபாடு காரணமாகவோ அல்லது, ஜனன அவயவங் களின் நோய் காரணமாகவோ கூட துாரம்-மாதவிடாய் நின்றுவிடுவது உண்டு. இந்நிலையை வைத்து, பெண் கர்ப்பவதி என்று கணக்கிட்டு, ஏமாறுவோரும் இல்லாமல் இல்லை. அத்தகையவர்கள் வயிற்றின் கன உணர்ச்சியை கட்டாயம் உணரவே முடியாது. ஆகவே, மாதவிலக்கு ஒழுங்குடன் ஏற்படுவதற்கான சிகிச்சைகளை மேற் கொள்ளுதல் வேண்டும். - . 2. காலை நேரத்தில் எழுந்ததும் வயிற்றுப் புரட்டல் ஏற்படும்; வாந்தி எடுக்க் உணர்வு தாண்டும்; வாந்தியும் உண்டாகும். மயக்கமும் தலைவலியும்கூட உண்டாகும். இந்நிலை கரு உருப்பெற தொடங்கிய ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதம் கழித்தோ தொடங்கி நான்கு மாதம் வரை நீடிக்கும். அதற்கு மேலும் இந்நிலை நீடிப்பது உண்டு. இதைத்தான் மசக்கை என்கிறார்கள். 3. முதல் நான்கு மாதங்கள் வரையிலும் உமிழ்நீர் சதா ஊறிகொண்டே இருக்கும். . . . - 4. சூலுற்ற ஒரு மாதத்துக்குப் பின்னர் அப்பெண் களின் ஸ்தனங்கள் (Breasts) கூடுதலான ரத்த ஓட்டத்தின்