பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பிரசவ கால ஆலோசனைகள் 6. மலச்சிக்கல் : கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் (Constipation) ஏற்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மலம், கழித்தல் அவசியமான கடமையாகும். கீரை வகைகள் சேர்த்த உணவும், வாழைப்பழங்களும் விளாம்பழமும் மலச்சிக்கலைத் தவிர்க்கும். கடுக்காய் கஷாயம் நல்ல தென்று ஆயுர்வேத சாஸ்திரம் தெரிவிக்கிறது. கர்ப்பவதிகளுக்குத் மிதமிஞ்சி தாகம் உண்டாகும். ஆகவே, வேண்டிய அளவு தண்ணிர் பருகலாமென்றே சொல்லப்படுகிறது. குழந்தையின் உடலில் உண்ட்ாகும் கழிவுப் பொருள்களும் தாயின் உதிரத்தில் கலக்கிற காரணத்தினால், அவற்றைச் சுத்தப்படுத்தி அப்புறப் படுத்துவதற்கு ரத்தத்திற்குத் தண்ணிர் அதிகமாகத் தேவைப்படுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும் நீர் அருந்துதல் அவசியமாகும். பழரசமும் சூப் வகைகளும் பயன்தரும். இவை மூலமும் மலச்சிக்கல் ஏற்படும்போது, மருத்துவரது யோசனைப் பிரகாரமும் மலக்கழிவுக்கு. மருந்துகளை (mild lataxive) படுக்கப் போகும்போது உட்கொள்ளலாம். - - 7. நீர்ப்பரிசோதனை கர்ப்பம் தரித்தது முதல் நீர் அவ்வப்போது கழிக்கப் பட்டு விடவேண்டும். குடிக்கும் தண்ணிர் உடலில் உள்ள கழிவுப் பொருள்களையும் அமரியுப்பு போன்றவற்றையும் வெளியேற்றி விடுகிறது. மேலும் கருப்பை வளர்ச்சி அடைய அடைய அதில் அளவுக்கு மிஞ்சிய நீர் தேங்க இடம் இருப்பதில்லை. ஆகவே, மூத்திரத்தை எக்காரணம் கொண்டும், அடக்கி வைக்க முயல்வது சரியில்லை. கழிய வேண்டிய நீர் தாமதம் ஆனாலோ, அல்லது தடைப் பட்டாலோ, உடனடியாக நீர்ப்பரிசோதனை செய்வது அத்தியாவசியமாகும். இதை ஒருபோதும் மறக்கக்