பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பெண்களின் வாழ்வில் பிரசவம் என்பது, மறு ஜென்மம் எடுப்பது போல என்பார்கள். அந்த அளவுக்கு மிகச் சிரமமான நிலை என்றாலும், அதிலும் எல்லையற்ற மகிழ்ச்சி பெறுவதே பெண்ணின் இயல்பு. - ஒரு பெண் கர்ப்பம் தரித்ததைத் தெரிந்துகொண்ட நாள் முதல் இனம் புரியாத மகிழ்ச்சியடைகிறாள். ஆயினும் அவள்ச் மழலைச் செல்வத்தை ஈன்றெடுக்கும் நாள்வரை எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற முறைகளைப் பல பெண்கள் அறிந்திருப் பதில்லை. அத்தகைய பெண்களுக்கு ஒரு சிறந்த வழி காட்டியாய் இந்த நூலை உருவாக்கியுள்ளேன். பெண் களுக்கு இந்த நூல் பயன்படும் என்பதில் மகிழ்ச்சி. இந்நூலை வெளியிட முன்வந்த மதி நிலையப் பதிப்பாளர் திரு எஸ். பி. மெய்யப்பன் அவர்களுக்கு என் இதய நன்றி என்றும் உரியது. பூவை. எஸ். ஆறுமுகம்.