பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசவ கால ஆலோசனைகள் "நம் இல்லத்தைக் காக்கும் அழிவில்லாச் சக்தி சொரூபத்தின் மடியிலே, நீ தலைமுறை தலைமுறையாகத் தாலாட்டப் பட்டிருக் கின்றாய்!

::சொர்க்கத்தின் முழு முதற் செல்வமும் அருணோதயத்தோடு பிறந்த இரட்டைப் பிறவி யுமான நீ, உலக உயிர் ஒடையோடு மிதந்து வந்து, என் இதயத்திலே கரை சேர்ந்து விட்டாய்...!"-

{{<right|>}} -தாகூர் {{largeசீ}ருஷ்டிப் புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிறாள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத். துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனால் பெண் தாய்மைப்பேற்ற்ை அடையும் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்றாள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கும் ஒரு விள்க்கம் கிடைத்து விடுகின்றது! ஆம்; குழந்தைதான் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அந்த ஆத்மாவை அருளுகிற-அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி-ஒரு தவம்! உண்மைதான்; தாய் தவம் இருந்து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மதலை உலகின் ஜனத்தொகையில் ஓர் அங்கம் வகிக்கத் தொடங்கு கிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக் காத்திருக்கின்றது. வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாக வும் இயங்கத்தொடங்கி விடுகின்றது . குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே' சொல்லப்படுவது உண்டல்லவா!-இம்மொழி ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண் போதுதான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம்