232 பிறந்த மண்
குழந்தைகளைப் போல் துள்ளிக் குதித்து ஓடிவந்து வரவேற் றனர்.
பிரயாணம் முழுவதும் சுகமான அனுபவங்கள் ஏற் பட்டனவா?-என்று முகம் மலரச் சிரித்துக் கை குலுக் கினார் அவர். திருமதி வோட்ஹவுஸ் மகிழ்ச்சிப் பெருக் கினால் தன் பெண்களை அப்புடியே கட்டித் தழுவிக் கொண்டார்.
வில்லி தன் தாயையும், தந்தையையும் ஒர் ஒரமாக அழைத்துக் கொண்டுபோய் ஏதோ கூறினாள். வோட்ஹவு ஸ்-க்கும், திருமதி வோட்ஹவுஸுக்கும் முகத்தில் இருந்த மலர்ச்சி மறைந்தது. அவர்கள் அழகிய நம்பியின் அருகே வந்தனர். "நீங்கள் வேலை பார்த்து வந்த இடத்தில் இப்படி விபரீதமாக நடந்து கடையை மூடிவிட்டார் களாமே? இப்போதுதான் லில்லி எல்லா விவரமும் சொன் னாள். இரண்டு மூன்று நாட்களாக எல்லாப் பத்திரிகை களிலும் இந்தப் பேச்சுத்தான். ஆனால் அதே கடையில் தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்களென்று எனக்குத் தெரி யாது. லில்லி சொன்ன பின் இப்போதுதான் அறிந்தேன். என் மனமார்ந்த அனுதாபங்கள்” என்றார் வோட்ஹவுஸ்.
"பரவாயில்லை! அதைப் பற்றி நான் அதிக வருத்தம் அடையவில்லை’-என்று அழகியநம்பி அவருக்குப் பதில் கூறினான்
'டிரைவரிடம் உங்கள் நண்பரின் முகவரியைக்சொல்லி
அனுப்புங்கள். போய் அழைத்துக் கொண்டு வரட்டும்’என்று நினைவூட்டினாள் மேரி.
அழகியநம்பி காரின் அருகே சென்று பம்பலப்பிட்டியா வில் சபாரத்தினம் குடியிருக்கும் த்ெருவின் பெயரைச் சொல்லி அடையாளமும் கூறினான்.
"இருபது நிமிடங்களில் கூட்டிக்கொண்டு வந்துவிடு கிறேன். நீங்கள் உள்ளே பேசிக்கொண்டிருங்கள்”-டிரைவர்