பக்கம்:பிறந்த மண்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசார்தி 241

ஏன்? இன்னும் ஒரு வாரம்போல ஆகும்!” 'இல்லை. சும்மாதான் கேட்டேன். நான் நாளைக்குக் காலையில் கப்பலேறலாம் என்றிருக்கிறேன்."-அழகியநம்பி யின் குரல் தழுதழுத்தது.

என்ன? அதற்குள்ளாகவா? சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற நீங்கள் விரும்பினால் பிரமநாயகத்தைச் சந்தித்துச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு போகலாமே?”

‘'வேண்டாம்! நான் அவரைச் சந்திக்கவும் விரும்ப வில்லை.அவரிடம் சொல்லிக்கொள்ளவும் விரும்பவில்லை."

'அவ்வளவு வெறுப்பா?"

"வெறுப்புக் கிடையாது! இரக்கமும் கிடையாது! இனி மேல் நான் என்னைப்பற்றி மட்டும்தான் கவலைப்பட முடியும்.” ... •

. கடைக்குள் உங்கள் பொருள்கள் எவையேனும் இருக் கின்றனவோ?? - . .

"எதுவும் இருப்பதாக நினைவில்லை. இருந்தாலும் அவற்றை நினைத்து நான் காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை’-தீர்மானமாகக் கூறினான் அவன்.

வோட்ஹவுஸும் திருமதி வோட்ஹவுஸும்-அழகிய நம்பியை ஆன மட்டிலும் கெஞ்சிப் பார்த்தார்கள். 'வந்து முழுமையாக ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் நீங்கள் இப்படி மனம் வெறுத்து ஊர் திரும்புவது எனக்குப் பிடிக்க வில்லை. நீங்கள் எந்த இடத்தை நம்பி எவரை அண்டிக் கொண்டு வந்தீர்களோ, அங்கே அவரிடத்தில் விபரீத விளைவுகளால் அவநம்பிக்கை அடைந்துவிட்டீர்கள். அவர்

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/243&oldid=597754" இலிருந்து மீள்விக்கப்பட்டது