பக்கம்:பிறந்த மண்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிறந்த ஆண்,

நீர்க்கர்வியேறிய நான்குமுழம் வேட்டியும் எப்போதோ தைத்த அரைக்கைச் சட்டையும், கையில் ஒர் ஒட்டுப் போட்ட குடையுமாக...அவர் விசுக்கு விசுக்கென்று நடப்பு:து. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. துட்டைச் செலவழிப் பதில் சிக்கனமும், கட்டுப்பாடும் உள்ள் இந்த மனித்ரா சில ಇಚ್ಲಕ್ಸೆಲ್ವಹಿತ್ವಕೆ @ಆಕೆ ೯ ಸ್ಥTುಹತ್ಲಿ 695 பற்றித் தெரியாதவர்கள் நிச்சயமாகச் சந்தேப்படத்தான் செய்வார்கள். ' ' ' , , - - - -

ஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம் ப்ோல் வேகமாக நடந்தார். அவருடன் தொடர்த்து ந்டக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லாவகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு.தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெக்டி படுக்கை:முட்டை முடிச்சுகளை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நண்டயில் உற்சாக மில்லை. - -

காலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் துரத்துக்குடி வந்து சேருகிறவரை பச்சைத் தண்ணிர்கூட வாயில் ஊற்றிக் க்ொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழி காக இருந்தார், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவ சியத்துக்காகவும் செலவழிக்காடில் இறுக்கிப் பிடிப்பது இன் னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்க்ார'மனிதர் இந்த இரண்டாவ்து வகையைச் சேர்ந்தவராக இருப்பார்போல்' தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டு மென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/32&oldid=596668" இலிருந்து மீள்விக்கப்பட்டது