பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பிற்காலச் சோழர் சரித்திரம் சுந்தரசோழன் ஆளுகையில் துன்பத்தால் 'ஆ' என்று ஓலமிட்டு அரற்றியவர் எவரும் இலர் என்றும் அதற்கு மாறாகச் சிவபெருமானை வணங்குங்கால் மக்கள் கூறிய ' அர' என்ற ஒலிதான் கேட்கப்பெற்றது என்றும் திரு வாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன 1. இம் மன்னர்மன்னன் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆத ரித்துள்ளான். இவன் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், அவர்கள் இவன்மேல் பாடிய பாடல்களுள் இரண்டு வீர சோழிய உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றன 2. அவற்றால் இவன் சிவபெருமானிடத்தில் பெரி தும் ஈடுபாடுடையவன் என்பதும் பௌத்தம் முதலான புறச் சமயங்களை வெறுக்காமல் ஆதரித்து வந்தவன் என்பதும் இனிது வெளியாகின்றன, பௌத்த சமயத்தினரான தமிழ்ப் புலவர் ஒருவர் இவ்வரசன் வண்மையும் வனப்பும் திண்மையும் சிறந்து உலகில் வாழுமாறு புத்தர் பெருமானை வேண்டிப் பரவியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாம். எனவே, இவன் சமயப் பொறையுடையவனாய்ப் பல்வகைச் சமயங்கட்கும் பாது காவல் பூண்ட பெருங்குண வேந்தனாக வாழ்ந்து வந்தனன் என்பது தெள்ளிது. 1. S. I. I., Vol. III, No. 205, Verse 58. 2. - இந்திர னேறக் கரியளித் தார்பரி யேழளித்தார் செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப் பைந்துகி லேறப் பல்லக் களித்தார் பழையாறை நகர்ச் சுந்தரச் சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே' (வீரசோ -அலங். 10) ‘ போதியந் திருநிழற் புனித நிற் பரவுதும் மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும் திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே'. (வீரசோ -யாப்பு, 11.)