ஒன்பதாம் அதிகாரம் உத்தம சோழன் கி. பி. 970-985 இவன் முதல் கண்டராதித்த சோழனுடைய புதல் வன். அவ்வேந்தன் இறந்தபோது இவன் சிறுகுழந்தை யாயிருந்தமையால் முடிசூட்டப் பெறவில்லை. அந்நாளில் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் என்பவன் சக்கர வர்த்தியாக முடிசூட்டப்பெற்று அரசாண்டான் என்பதும் பிறகு அவன்மகன் சுந்தரசோழன் ஆட்சிபுரிந்தனன் என்பதும் முன்னர்க் கூறப்பட்டுள்ளன. சுந்தரசோழ னுக்குப் பின்னர் அவன்மகன் முதல் இராசராசசோழன் பட்டம் பெற்று அரசாளவேண்டும் என்று சோழ நாட்டி லிருந்த பொதுமக்கள் பெரிதும் விரும்பினர் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் நன்கறியக்கிடக்கின் றது.1 அன்னோர் அங்ஙனம் விரும்பியும், இராசராச சோழன், தன் பெரிய பாட்டன் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனது உரிமையையும் விருப்பத்தையும் மதித்து இவனுக்குச் சோழ நாட்டின் ஆட்சியை அளித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலது. எனவே, இராசராச சோழனது நியாய வுணர்ச்சியும் அறநெறி பிழையாக் கொள்கையுமே உத்தம சோழன் முடிசூட்டப்பெறுவதற்கு ஏதுக்களாக இருந்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவன் முடிசூட்டு விழா கி. பி. 969-ன் இறுதியிலாதல் கி. பி. 970-ன் தொடக்கத்திலா தல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திருவிடை மருதூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது. . இவ னைக் • கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர் 3 ' என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றமையால் இவ்வேந்தன் • பரகேசரி ' என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன் என் பது தேற்றம், இவனுக்கு முன் ஆட்சிபுரிந்த சுந்தர 1. S. I. I., Vol. III, No. 205, Verse 69. 2. Ibid, No. 131. 3. Ibid, Nos. 128 and 150.
பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu/page114-900px-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.djvu.jpg)