பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் சோழன் - இராசகேசரி' என்ற பட்டம் பெற்றவனாதலின் இவன் ' பரகேசரி' என்று தன்னைக் கூறிக்கொள்வது அக் காலத்தொழுகலாற்றிற்கு ஏற்புடையதேயாம். இனி, உத்தம சோழன் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டுக் கள், செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுல்லைவாயில்' , காஞ்சி புரம்' , திருவொற்றியூர், திருவடந்தை , மீஞ்சூர் 5 என்னும் ஊர்களிலும், வட ஆர்க்காடு ஜில்லாவில் பழங்கோயில் , திருமால்புரம்', என்னும் ஊர்களிலும் தென்னார்க்காடு ஜில்லாவில் திருவதிகை வீரட்டானத்திலும் 3 காணப் படுகின்றமையால் தொண்டைநாடும் திருமுனைப் பாடி நாடும் இவ்வேந்தன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது தெள்ளி தின் விளங்கும். இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ணதேவன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்த அந்நாடுகள் சுந்தரசோழன் காலத்திலேயே சோழர் ஆட் சிக்குள்ளாயின. எனவே, உத்தம சோழன் ஆட்சிக்காலத் தில் அந்நாடுகள் எத்தகைய இன்னல்களுமின்றி மிக்க அமைதியாக நன்னிலையில் சிறந்திருந்தன என்பது அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படு கிறது. சோழ நாட்டிலும் இவ்வரசன் காலத்துக் கல்வெட்டுக் கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவை, இவன் தாய் செம்பியன் மாதேவியும் இவன் தேவிமார்களும் அரசியல் அதிகாரிகளும் புரிந்த அறச்செயல்களை எல்லாம் கூறுவனவாயுள்ளன. அவற்றால் அக்காலத்து ஆட்சி முறை, மக்கள் நிலை, வழக்கவொழுக்கங்கள், பொருளாதார நிலை முதலானவற்றை நன்கறியலாம். 1. S. I. I, Vol. III, No. 141. 5. Ins. 134 of 1916. 2. Ins. 2 of 1906. 6. Ins. 352 of 1925. 3. S. I. I., Vol. III, No.143. 7. S. I. I., Vol. III, No. 142 4. Ibid, No. 125. 8. Ins. 398 of 1921.