பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தம சோழன் இவ்வரசி மழவர் குலத்தில் தோன்றி முதற் கண்டரா தித்த சோழன் மாதேவியாகிப் பெருவாழ் வெய்தியவள் ; எல்லையற்ற சிவபத்திச்செல்வம் படைத்தவளாய்ச் சிறப் புற்றிருந்தமைபற்றி மாதேவடிகள் எனவும் வழங்கப் பெற்றவள். இவ்வம்மை தன் கணவனை இளமைப் பரு வத்தில் இழந்தும், குழந்தையாயிருந்த தன் ஒரே புதல்வ னாகிய உத்தம சோழன் பொருட்டே உயிர் வாழ்ந்தவள். இவள், தன் கணவன் இறந்த பின்னர், அரிஞ்சயன், சுந்தர சோழன், உத்தம சோழன் ஆகிய மூவேந்தர் ஆட்சிக் காலங்களிலும் முதல் இராசராச சோழன் ஆட்சி யில் கி. பி. 1001 வரையிலும் உயிருடன் இருந்தனள். 1 இவ்வரசி, செங்கற் கோயில்களைக் கற்றளிகளாக எடுப் பித்தும் பல கோயில்களுக்கு நிவந்தங்கள் விட்டும் அணி கலன்கள் அளித்தும் பொன்னாலும் வெள்ளியாலும் பல் வகைக் கலங்கள் செய்து கொடுத்தும் புரிந்துள்ள அறங் கள் மிகப்பலவாம். அவற்றுள், முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராச புரம் என்று இக்காலத்தில் வழங்கப்பெறும் திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தைக் கற்றளியாக எடுப் பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம். 2 அத்திருக்கோயிலுக்கு 'ஸ்ரீ கண்டராதித்தன்' என்று தன் ஒப்புயர்வற்ற கணவன் பெயரையே இவ்வம்மை வழங்கி யிருப்பது' அவன்பால் வைத்திருந்த பேரன்பினை இனிது புலப்படுத்தா நிற்கும். அக்கோயிலில் கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடுவதாகப் படிமம் ஒன்று வைக்கப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம். அக் கோயிலைச் செம்பியன்மாதேவியின் ஆணையின்படி சிறந்த கற்றளியாக எடுப்பித்தவன் ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரனான இராசகேசரி மூவேந்த வேளான் 1. Ins. 200 of 1904. 2. S. I. I., Vol. III, Nos. 151 and 151 A. 3. Ibid, No. 146.