பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 101 மங்கலமொழியால் தொடங்கப்பெற்றிருத்தலால் அம் மெய்க்கீர்த்தியின் தொடக்கத்திலுள்ள தொடர்மொழிகளாகிய அவற்றைக் கண்ட அளவிலேயே அக்கல்வெட்டு எவ்வேந்தனுடைய ஆட்சிக்காலத்தில் வரையப்பட்டது என் பதை ஐயமின்றிக் கூறிவிடலாம். முதல் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி ' திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்' என்று தொடங்குகிறது. அம்மெய்க்கீர்த்தி யில் கூறப்பட்டுள்ள இவ்வேந்தனது வீரச்செயல்கள் எல்லாம் ஆண்டுதோறும் அவை நிகழ்ந்த முறையில் நிரல்பட வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே, ஆட்சியாண்டுகள் ஏற ஏற மெய்க்கீர்த்தியும் வளர்ந்து கொண்டே போகும் என்பது ஒருதலை. ஏனைய மன்னர் மெய்க்கீர்த்திகளும் அத்தகையவே. இனி, இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் துணை கொண்டு இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போர், நிகழ்ச்சிகளையும் இவனது வெற்றிச் சிறப்பையும் ஆராய்ந்து காண்பது அமைவுடையதேயாம். ' திருமகள் போல' என்று தொடங்கும் இவன் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 993 முதல் தான் கல்வெட்டுக் களில் காணப்படுகிறது. இவன் தன் ஆட்சியின் நான் காம் ஆண்டின் தொடக்கத்திலேயே ' காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன்' என்று தன்னைக் கூறிக்கொள்வதோடு2 தன் மெய்க்கீர்த்தியிலும் அச்செய லையே முதலில் குறிப்பிட்டுள்ளனன். ஆகவே, இவன் கி. பி. 988-ஆம் ஆண்டில் காந்தளூர்ச் சாலையில் போர் நிகழ்த்தி வெற்றிபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முதற் போர் அதுவேயாகும். காந்தளூர்ச் சாலை என்பது திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக இந்நாளில் உளது. அதனை வலியசாலை 1. Ins. 261:of 1910. 2. Ins. 395 of 1922